காசாவில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் 85 பேர் பலியாகினர். காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் நேற்று கடுமையான குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டன. காசா நகரின் கடற்கரையில் நடந்த ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகத்தில் அனுமதி அற்ற மனை பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள் இன்று முதல் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-2026-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, […]
போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டதில் அஜித் உயிரிழப்பு” சிவகங்கை மடப்புரத்தில் இளைஞர் அஜித் குமார் உயிரிழப்பு குறித்து போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தகவல். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் […]
சர்வதேச சந்தையில் நிலவிவரும் கச்சா எண்ணையின் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. மாதம் தோறும் வணிக சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தொடர்ந்து 3வது மாதமாக வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மே மாத தொடக்கத்தில் கூட, நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.14.50 விலையைக் குறைத்திருந்தன. […]
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக, 37 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கு வாசல் கதவு திறக்கப்பட உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரையை ஒட்டியவாறு அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயில், வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெறவுள்ள மகா குடமுழுக்கு விழாவுக்காக மிகுந்த விமர்சையாக தயாராகி வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 37 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மேற்கு வாசல் கதவு இம்முறை திறக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் 300 கோடி […]
திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மர்ம நபர்கள் சிலர் மலம் கழித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வேங்கை வயல் குடிநீர் தொட்டிகளும் மலம் கலந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த பெரும் […]
ஜூலை மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. ஜூன் மாதம் முடிவடைந்து ஜூலை மாதம் தொடங்கி உள்ளது. ஒவ்வொரு மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிராந்திய விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட ஜூலை மாதத்தில் மொத்தம் […]
ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, திடீரென வீசிய பலத்த காற்றால் அதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது. பலத்த மழைக்கு மத்தியில் வந்த விமானம், தற்காலிகமாக திசைதிருப்பப்பட்ட போதிலும் பாதுகாப்பாக தரையிறங்க முடிந்தது. இந்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 27-ஆம் தேதி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெரும் விமான விபத்து தற்காலிகமாக […]
தமிழகத்தில் அனைத்து வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்பொழுது மின் […]
ரயில் டிக்கெட் விலையை இந்திய ரயில்வே சிறிதளவு உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் மூலம் கோடிக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இதனால் நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. மலிவான, வசதியான பயணம் உள்ளிட்ட காரணங்களால் பலரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இந்த நிலையில் ரயில் டிக்கெட் விலையை இந்திய ரயில்வே சிறிதளவு […]

