அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பாண்டு மார்ச் மாதம் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகலை இன்று (ஜூன் 10) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இணையதளத்தில் நோடிபிகேசன் பகுதியில் ‘எச்.எஸ்.இ. முதலாம் ஆண்டு தேர்வு, மார்ச் 2025 – ஸ்கிரிப்ட்ஸ் டவுன்லோடு’ என்பதை கிளிக் செய்து, அதில் காண்பிக்கப்படும் பக்கத்தில் தேர்வெண் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
திருவண்ணாமலை மாவட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக சேலத்தைச் சேர்ந்த குழந்தைவேலுவிடம் ரூ.11 லட்சம், அசோக்கிடம் ரூ.5.20 லட்சம் பெற்று அதிமுக ஐடி பிரிவு மாநில நிர்வாகி பிரசோத் என்பவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பிரசாத் மீது நுங்கம்பாக்கம் காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு […]
சிக்கன் பிடிக்காதவர்களே இல்லை. ஞாயிற்றுக்கிழமை என்றால், சிக்கன் வகைகள் கண்டிப்பாக இருக்கும். ஆனால், அடிக்கடி சிக்கன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா.. இல்லையா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. தினமும் சிக்கன் சாப்பிட்டால் என்ன நடக்கும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம். கோழி இறைச்சியில் புரதச்சத்து அதிகம். பொதுவாக, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கோழி இறைச்சி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், தினமும் அதை […]
இந்திய குடிமக்கள் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை. தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை. இந்த விஷயத்தில் சவுதி அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், எகிப்து, ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், துனிசியா, அல்ஜீரியா, பாகிஸ்தான், ஏமன் ஆகிய 14 நாடுகளுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக […]
சூதுவாது அறியா சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் முனைப்பு காட்டுவது திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துள்ளது என்பதை தானே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டுமே குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 56% அதிகரித்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளதாக வெளியாகியுள்ள […]
1990ம் ஆண்டில் வெறும் ரூ.1 லட்சத்துக்கு தந்தை வாங்கிய பழைய பங்குச் சான்றிதழ்கள் மூலம் தற்போது மகன் ரூ.80 கோடிக்கு அதிபதியான சுவாரஸிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூக ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை நாம் அடிக்கடி படிக்கிறோம், அதில் ஒருவரின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தின் சில பங்குகளை வாங்கியதாகவும், இன்று அந்தப் பங்குகளின் மதிப்பு கோடிகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது ரெடிட்டில் பகிரப்பட்ட இந்த சுவாரஸிய சம்பவத்தை […]
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உட்பட 12 பேருக்கு நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்தாண்டு அமலாக்கத் துறை […]
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 7 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 15-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். இன்று ஈரோடு, […]
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற […]
சட்டப்பேரவை அறிவிப்பை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள 2000 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகளுக்கு சிறப்பு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.2,500 மதிப்பில் புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, […]

