சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2022-2023ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் செப்.10ஆம் தேதி முதல் மின்கட்டண ஆணை நடைமுறைக்கு வந்தது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதால், ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இமாசல பிரதேசத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பியபோது ஆம்புலன்ஸ் வந்ததால் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டு காத்திருந்தார் பிரதமர் மோடி. இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், இமாச்சல பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, சம்பியில் பாதுகாப்பு வாகனங்களுடன் […]
தமிழக அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கின்றது என்று பா.ஜ.க. நிர்வாகி அலிஷா அப்துல்லா பேச்சு சர்ச்சையாகி உள்ளது. திரைப்பட நடிகையான அலிஷா அப்துல்லா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.கவில் சேர்ந்தார். பல்வேறு பா.ஜ.க. தலைவர்கள் இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என கூறி வரும் நிலையில் அலிஷா அப்துல்ல தமிழகத்தில் தமிழை திணிப்பதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தெலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ’’தமிழக அரசு தமிழ்நாட்டில் […]
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றியடைந்ததை ஒட்டி நடத்தப்பட்ட வெற்றி விழா கொண்டாட்டத்தில் அடிதடி ரகளை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா, நந்தினி, விக்ரம் பிரபு, ஜெயராம், சரத்குமார், பிரபு, ஷோபிதா, விக்ரம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசானது. திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்கு மேலாகின்றது. தற்போது வரை திரையரங்குகளில் வசூல் குவிகின்றது. […]
குணச்சித்திர நடிகை, சீரியல் நடிகை என மிகவும் பிரபலமான நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் திடீர் மரணமடைந்தார். ’’குறத்திமகன்’’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்தவர் ஜெயசித்ரா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஜெயசித்ரா பெரும்பாலும் 1970 மற்றும் 1980களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனபோதும் கே.பாலச்சந்தரின் திரைப்படம்தான் இவருக்கு […]
ஆசரியர் தேர்வில் தேர்வாளர் நுழைவு சீட்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக சன்னி லியோன் படம் வந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. கர்நாடகாவில் நடந்த ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தேர்வர் ஒருவர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய பதிவெண்ணை செலுத்தினார்.நுழைவு சீட்டும் வந்தது. ஆனால், அதில் இருந்த படத்தில் இருந்த நபர் சன்னிலியோன். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் குழப்பமானார். இந்த அனுமதிச்சீட்டை […]
ஜி.பி.முத்து அரசியலில் குதித்துள்ளார் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகிய ஜ.பி.முத்து தனது குடும்பமே அதிமுக-வுக்கு ஆதரவு எனவும் ஜெ.தான் எனக்கு மிகவும் பிடித்த தலைவர் எனவும் வீடியோ வெளியுள்ளார். இந்த வீடியோவை அதிமுக ஐ.டி.விங் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு ஜி.பி. முத்துவை ஈடுபடுத்தலாம் என அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. டிக்.டாக் மூலம் புகழ்பெற்று தற்போது […]
தற்போதைக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறாது என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதனால் 11,12 ஆகிய தேதிகளில் ஓரு சில இடங்களில் மிகக் கனமழைபெய்யும். தமிழகம் […]
திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளின் இரண்டாம்படை வீடு திருச்செந்தூரில் அமைந்துள்ளது. கடலோரத்தில் வீற்றிருக்கும் செந்தில்நாதனை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலின் புனித தன்மையை காக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் இனி பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது. வழக்கு ஒன்றை விசாரித்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை […]
திருத்தணி பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் திருத்தணியை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து சுமார் 1000மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களில் சிலர் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் நல்ல டிப்டாபாக கிளம்பி வருகின்ற நிலையில், பள்ளிக்கு செல்லாமல் ரயில், பேருந்து நிலையம் மற்றும் பூங்கா என பொது இடங்களில் ஜாலியாக சுற்றி திரிந்து வருகின்றனர். […]