திருநெல்வேலி மாவட்டம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் முதல்வரின் நிவாரண நிதிக்காக பிச்சை எடுத்து தற்போது 10 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார். மேலும் 2010-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை யாசகத்தில் , தனக்கு கிடைக்கும் அனைத்து பணத்தையும் கொண்டு அரசு பள்ளிகளுக்கு நாற்காலி, மேஜை, தண்ணீர் வழங்கும் இயந்திரம் போன்ற பல உபயோக பொருட்களை வழங்கி உள்ளார். அதனை தொடர்ந்து, கொரோனா காலத்தில் இருந்து யாசகம் பெற்று அதில் […]

பருவமழை காலங்களில் பரவும் ”மெட்ராஸ் ஐ” எனும் கண் வலி நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. சென்னையில் கடந்த 3 நாட்களாக வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வரும் நிலையில், தற்போது ’Madras Eye’ எனும் கண்வலியால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் மக்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இது வழக்கத்தை விட தற்போது அதிகரித்துள்ளது. ’மெட்ராஸ் ஐ’ […]

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு தரவிருந்த வருகை தள்ளி போனதற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்களின் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இதனை தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, வழக்கு மீதான விசாரணைக்கு ஆஜரான […]

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறார் என திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் மனுவில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கையொப்பமிட நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தது. ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளிக்க உள்ள பொது மனுவில் கையெழுத்திடுமாறு எதிர்க்கட்சிகளை தி.மு.க கேட்டுக் […]

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சரிந்துள்ள சூழலில் வாய்ப்புள்ளவர்கள் வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை மேற்கொள்ள வேண்டுமென டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுப்புற சூழல் அமைச்சர் கோபால் ராய், ”வாகன மாசுபாட்டை குறைக்க மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். அரசியல் மூலம் காற்று மாசு பிரச்சனைக்கு தீர்வு காண […]

பாரத ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். Relationship Manager பணிக்கு தேர்வு […]

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, 90 நாட்கள் கெடாமல் இருக்கும் ‘ஆவின் டிலைட்’ பசும்பாலை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிமுகப்படுத்தியுள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும், ஒரு லட்சம் லிட்டர் டிலைட் பசும்பாலானது UHT (அல்ட்ரா-ஹை டெம்பரேச்சர்) தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் 90 நாட்கள் கெடாமல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்களுக்கு, 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் ’டிலைட் பால்’ உதவியாக இருக்கும். 90 நாட்கள் […]

போதைக்கு அடிமையாகி பணத்துக்காக தங்களை அடித்து துன்புறுத்திய மகனை, கூலிப்படைக்கு ரூ. 8 லட்சம் கொடுத்து பெற்றோரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள கம்மம் நகரை சேர்ந்தவர் க்ஷத்திரிய ராம்சிங்- ராணிபாய் தம்பதி. ராம்சிங் அங்குள்ள தனியார் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு சாய்ராம் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளார். மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். […]

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா, பெரிய கோவில் வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி வருகிற 2ஆம் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, இன்று (நவ.3) பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், […]

கனமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. தமிழகத்தில் இன்று 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்ற சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பை முன்னிட்டு, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு […]