சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தை போல மதுரையில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரில் 60 பெண்கள் குளித்ததை ஆண் நண்பருக்கு அனுப்பியதாக புகார் எழுந்ததை அடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இதே போல மதுரையில் இளம் பெண் ஒருவர் தனியார் தங்கும் விடுதியில் பிற பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து அனுப்பி வந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் […]

ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நாயை சாமர்த்தியமாக மற்றொரு நாயை சாமர்த்தியமாக காப்பாற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. ஒருவர்மரக்கட்டையை தூக்கி ஆற்றில் வீசியதும் மரக்கட்டையை பிடிக்க விழுந்த நாய் மரக்கட்டையை வாயில் கவ்விக்கொண்டு நீந்த முடியாமல் தவிக்கின்றது. பின்னர் முயற்சித்து தான் கவ்விய மரக்கட்டையை கரையில் நின்றிருந்த நாய்க்கு கவ்வ சிறு இடம் கொடுத்தவுடன் அந்த மரக்கட்டையை வாயால்கவ்வி எடுத்து கரைக்கு மீட்கின்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. வாயில் கவ்விக் […]

அரியலூர் மாவட்டம், ஓரியூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவரது மகன் முருகானந்தம் (37). இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர் ஒருவரிடம் செல்போன் திருடியதாக இன்று காலை 6 மணியளவில் சமயபுரம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளிகள் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவரை சமயபுரம் காவல் நிலையத்தில் உள்ள விசாரணை கைதி அறையில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக […]

அதிமுக-வில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக ஒரு கடைசி ஆயுதம் இருப்பதாகவும் தேவைப்படும்பட்சத்தில் அந்த பிரம்மாஸ்திரத்தை ஓ.பி.எஸ். எய்வார் என்று பேசப்படுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியை வழிநடத்தி வந்தனர். திமுகவில் ஒற்றை தலைமை பற்றி பேச்சு எழுந்ததால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு இருவருமே தங்களது ஆதரவாளர்களுடன் […]

`கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை’ என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் இன்று […]

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெற்றோர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ராமலிங்கம் வழக்கு தொடர்ந்தார். கடந்த முறை விசாரணையின்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று வழக்கு நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சி.பி.சி.ஐ.டி. தரப்பில் அறிக்கைகள்  தாக்கல் செய்யப்பட்டன. […]

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை அருகேயுள்ள சோழங்கர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி பேபி. இவர் தனது வீட்டிற்கு பின்புறம் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இஅவரது பட்டாசு கடையில் இவரது உறவினரான கொட்டையூர் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் ரவி (45) பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று பிற்பகல் கடையில் வெடி செய்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசு கடை தீப்பற்றி […]

கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது? என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி ஈஷா சார்பில் சென்னை […]

திருச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் குறித்த வழக்கில்இதுவரை ஒரு சிறு துப்புகூட இதுவரை கிடைக்கவில்லை. திமுகவின் மூத்த தலைவரும் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு அவர்களின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு ஒரு நாள் நடைபயிற்சிக்கு சென்றபோது கொடூரமாக கொலை செய்து வீசிச் சென்றனர். இந்த வழக்கு சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்ற வருகின்றது. அதிமுக ஆட்சியின் போது இந்த […]

அரியலூர் மாவட்டம், இளங்குடந்தை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகா (24). இவர் காங்கயத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நூல் மில்லில் பணிபுரிந்து வந்தார். அதே மில்லில் பணிபுரிந்தவர் விக்னேஷ். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கனீஸ் (6) என்ற மகனும், மகாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், தம்பதியினரிடையே […]