ஒருவேலை பிரதமர் நரேந்திர மோடி படித்த பொலிடிகல் சையின்ஸ் படிப்பில் பட்டம் பெற்றிருந்தால் படித்தவர் எனசொல்லியிருப்பார் ஜே.பி.நட்டா என பி.டி.ஆர். பதிலடி கொடுத்துள்ளார். தி.மு.கவில் படித்த தலைவர்கள் இல்லை அதனால்தான் நீட் தேர்வையும் தேசிய கல்வி கொள்கையையும் எதிர்க்கின்றனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இரண்டு நாள் பயணமாக பா.ஜ.க. தலைவர் ஜேபி நட்டா […]

சவுக்கு சங்கரை அரசுப் பணியில் இருந்து நிரந்தரமாகநீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துறை உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான நோட்டீசை பெற சவுக்கு சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் , அரசு ஆவணங்களை கசியவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 2008ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் , ‘’சவுக்கு ’’ என்ற ஆன்லைன் இணையதளம் […]

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு 17 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். கோவை , பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம் , ஈரோடு உள்ளிட்ட பா.ஜ. அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடு, கார் மற்றும் கடைகளுக்கு பெட்ரோல் கு ண்டு வீசப்பட்டது. தீவைப்பு சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்றன. இந்நிலையில், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச் […]

கியூட் பிஜி தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான க்யூட் (CUET UG) எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் கட்டாயம் இந்த தேர்வை எழுதி […]

இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது. இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். இதனையடுத்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் வெடித்தது. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி […]

டெல்லியின் தெற்கு எக்ஸ்டன்ஷன் பார்ட் – 1 பகுதியில் “கோட்” என்ற தனியார் கேளிக்கை விடுதி இருக்கிறது. இந்த தனியார் கேளிக்கை விடுதிக்கு கடந்த 18-ஆம் தேதி அதிகாலை இரண்டு மணியளவில் ஒரு பெண் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அந்த கேளிக்கை விடுதியில் இருந்த பாதுகாவலர்கள் அந்த பெண்ணையும் அவரது நண்பர்களையும் விடுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பாட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் […]

விழுப்புரம், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு சென்றால், மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க போவதாக எஸ்.பி ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார். பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் மாணவர்களை மட்டுமல்லாமல், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா எச்சரிக்கை செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;- இந்த ஆபத்தான […]

குழந்தையை மீட்டுத் தர வேண்டும் என தாய் தொடர்ந்த வழக்கில் தந்தையிடம் குழந்தை வளர்வது சட்ட விரோதம் கிடையாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா அமிர்தநாயகம் என்பவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இருவருக்கும் 10வயதில் மகன் இருக்கின்றான். இந்நிலையில் தம்பதி பிரிந்ததால் மகன் அவனது தந்தையோடு வசித்து வருகின்றான். இந்நிலையில் ஜெயசித்ரா, தன் மகனை கணவரிடம் இருந்து மீட்டு […]

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பாஜக அலுவலகம் மற்றும் இந்து மத அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகளை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் தமிழகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது. […]

கலபுரகி மாவட்டம் கமலாப்புரா காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த நவீன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது பீதர் மாவட்ட எல்லையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உம்காரில் இருக்கும் ஒரு கிராமத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்க்கப்படுவதாகவும், அங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும் கூறினார். எனவே கஞ்சா பயிரிடும் கும்பலை பிடிக்க கலபுரகி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமந்த் தலைமையிலான காவல்துறையினர் […]