தமிழகத்தில் புளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்1.என்1. இன்புளூயன்சா காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரக்கூடிய மக்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான குழந்தைகள் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கபட்டு உள்ளனர். நெல்லை மாவட்டம் பத்தமடையில் மர்ம காய்ச்சலால் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தமடை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்துவின் […]

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் வரும் திங்கள் கிழமை பூமிக்கு அருகே வருகிறது. இது ஒரு அரிய நிகழ்வாகும். நமது சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருப்பது வியாழன். இது தான் சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளாகும். நமது பூமியை போல 1,300 பூமியை வியாழனில் அடக்கிவிடலாம். வியாழன் கோளை 75-க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றிவருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பிரம்மாண்ட வியாழன் கோள் தான் நாளை மறுநாள் பூமிக்கு அருகில் […]

மத்தியபிரதேசத்தில் எம்.பி. ஒருவர் தனது கைகளால் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேச மாநிலம் ரேவா தொகுதி பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா. சமீபத்தில் இவர் அரசுப் பள்ளிக்கு மரம் நடும் விழாவிற்கு சென்றார். அப்போது பள்ளியில் உள்ள கழிவறையை சோதனை செய்தார். அசுத்தமாக இருந்த கழிவறையை தன் வெறும் கைகளால் அவர் சுத்தம் செய்தார். இந்த காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. கழிவறையை […]

நாட்டின் முக்கிய நகரங்களில் அக்டோபர் 1-ம் தேதி 5ஜி சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை ஒரு சில மாதங்கள் அறிமுகப்படுத்த இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி குழுமத்தின் தலைமையில் கடந்த மாதம் 5ஜி அலைக்கற்றையை 1.50 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு விற்பனை செய்தது. அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் டெல்லி, மும்பை, […]

நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே இருக்கும் சங்கனாங்குளம் பகுதியில் குடியிருக்கும் ராமையா மகன் சந்திரன்(46). இவர் பாளையங்கோட்டை உழவர் சந்தை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். தற்போது குலசேகரப்பட்டினம் கோவிலுக்கு சந்திரன் மாலை அணிந்து இருக்கிறார். நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக சங்கனாங்குளம் சுடுகாட்டில் 6 அடிக்கு குழிதோண்டி படுத்து கொண்டு 21 நாள் விரதத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து பக்தர் சந்திரன் கூறுகையில், எனக்கு 9 வருடங்களுக்கு முன்பு தொண்டையில் புற்றுநோய் வியாதி […]

ஈரானில் பெண்கள் தற்போது கோபத்தின் உச்சக்கட்டத்தில் இருப்பதால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு வருவதால் ’ஹெல்ப் டு ஈரான்’ என்ற வாசகம் வைரலாகி வருகின்றது ஈரானில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி சரியாக ஹிஜாப் அணியவில்லை என கூறி 22 வயதான மாஜா அமினி என்ற பெண் தாக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பெண்கள் வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக தங்கள் முடியை வெட்டிக் கொண்டும் […]

மின்வாரிய ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3 சதவிகிதமாக உயர்ந்து 34 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.. […]

கோவையில் பாஜகவினரின்வீடுகளில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் ரயில்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் கடந்த மூன்று நாட்களாக பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் 9 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. கோவை வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அங்கிருக்கும் காவல்துறையினர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் […]

அமெரிக்கா மற்றும் கனடாவில் பிரிவினை வாத வன்முறை செயல்கள் மற்றும் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கை அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கனடாவில் வசிக்கும்இந்திய குடிமக்கள், குறிப்பாக மாணவர்கள் எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிராம்ப்டன் என்ற நகரில் சீக்கிய பிரிவினைவாத அமைப்பு காலிஸ்தான் அமைப்பு தனி காலிஸ்தான் நாடு என்ற தீர்மானத்தை கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பு உள்நோக்கத்துடன் […]

கரூரில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவிக்கு சாதிரீதியான பாகுபாடு காட்டப்படுவதாக ஊராட்சிமன்றத் தலைவி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நன்னியூர் ஊராட்சியின் தலைர் , துணைத்தலைவர் உள்பட பத்த பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதிமுகவை சேர்ந்த 5 பேரரும் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 5 பேர் என 10 பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில் ஊராட்சி தலைவராக சுதா என்பவர் இருக்கின்றார். […]