உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் போது, இரண்டு எம்.எல்.ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சபை நடவடிக்கையின்போது, பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ராகேஷ் கோஸ்வாமி செல்போனில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றொரு எம்.எல்.ஏ., தனது கையில் புகையிலையை கொட்டி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தார். இந்த இரண்டு வீடியோவையும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
டிக்டாக் ஆப் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து பைக்கை வேகமாக ஓட்டி, டிடிஎப் வாசன் அதை யூ டியூப்பில் வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து கோவை மாநகரக் காவல், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செப்டம்பர் 14-ஆம் தேதி டிடிப் வாசன் என்ற நபர் அவரது பைக்கில் யூடியூபர் ஜி.பி.முத்துவை பின் சீட்டில் உக்கார வைத்து கோவை மாநகரம், டி3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலக்காடு மெயின் […]
ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இந்த வாரம் சீனாவில் இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனையும் நான்கு உயர் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது… சீன அதிபரின் சர்வாதிகார போக்கை இது காட்டுகிறது அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.. லஞ்சம், பங்குச் சந்தை கையாளுதல் மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததற்காக […]
உத்தரபிரதேச சட்டசபையில், குற்றவியல் நடைமுறை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. சிறார் பாலியல் வழக்குகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு முன்ஜாமீன் வழங்கப்படகூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. மசோதா பற்றி பேசிய உத்தரபிரதேச சட்டசபை விவகார அமைச்சர் சுரேஷ்குமார் கன்னா, இதன்மூலம், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆதாரங்களை அழிப்பதற்கான வாய்ப்பு குறையும். பாதிக்கப்பட்ட பெண்ணையும், சாட்சிகளையும் அச்சுறுத்தும் வாய்ப்பு குறையும் என்று கூறினார். மேலும் இந்த […]
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, […]
கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான 25 கோடி ரூபாயை ஆட்டோ டிரைவர் ஒருவர் வென்றார்.. திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவருக்கு தான் இந்த ஜாக்பாட் அடித்துள்ளது.. தனது மகள் உண்டியலில் சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுத்து லாட்டரி வாங்கிய அனூப், விரைவில் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல திட்டமிருந்தார். இதற்காக, கேரள கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் […]
படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது மட்டுமின்றி அவர்களின் ஆசிரியர், பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.. பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.. பேருந்து படிகட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது, சீருடையிலேயே மதுபானம அருந்துவது பிற போதை பொருட்களை பயன்படுத்துவது என தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர் கதையாகி […]
உக்ரைன் போரில் பங்கேற்க விரும்பாத ரஷ்யாவை சேர்ந்த ஆண்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி தொடங்கியது.. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறது.. இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷ்யாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.37,200-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,912 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 38 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,719 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]