பொங்கல் பரிசுத் தொடர்பாக 3 அலுவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் கணிதம் படித்தும் கணக்குத் தெரியாத ஒருவரும் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்று கைதான ஒருவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டதாக விவரம் அறியாமல் குறை கூறப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
புற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரள மாநில முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன் நேற்று காலமானார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; சி.பி.ஐ.எம் தலைமைக் குழு உறுப்பினரும், மூன்று முறை அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். கொள்கை […]
கான்பூரில் டிராக்டர் டிராலி கவிழ்ந்ததில் 22 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர், பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். கான்பூரில் உள்ள சந்திரிகா தேவி கோயிலில் இருந்து வந்த டிராக்டர் டிராலி ஒன்று சனிக்கிழமையன்று கான்பூரில் உள்ள குளத்தில் விழுந்ததில் 26 யாத்ரீகர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் உயிரிழந்த நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கட்டம்பூர் பகுதியில் […]
கேரள முன்னாள் உள்துறை அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் உள்துறை அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் சனிக்கிழமை இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரான பாலகிருஷ்ணன் 2015 முதல் 2022 வரை மார்க்சிஸ்ட் […]
சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற எட்டு ரெயில் நிலையங்களில் இன்று முதல் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல்,எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய எட்டு ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் இன்று முதல் அதிகரித்துள்ளது. விழாக்காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் வேலை செய்பவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் செய்வதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக சென்று வருகின்றன. நாடு முழுவதும் இருக்கும் சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் ட்ராக் முறை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 26 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதை […]
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தை பொருத்தும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயம் செய்து வருகின்றனர். வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25.50 குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையை குறைத்துள்ளன. அந்த வகையில் சென்னையில் […]
புதுடெல்லியின் நவாடா பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியருக்கு மனைவியும் 9 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், ஆசிரியருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால், அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியருக்கும் அவரது மனைவிக்கும் நேற்று மாலை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஆசிரியர் அவரது மகள் கண் முன்னே மனைவியை […]
கேரளாவில், தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்குவதற்கு, முக்கிய நகரங்களில் இலவச தங்கும் மையம் அமைக்கப்பட உள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரளாவில் உள்ள முக்கிய நகரங்களில் “மையம் எனது கூடு” என்ற பெயரில் அரசு மையம் தொடங்கப்படும் என்றார். இந்த மையங்களில் இரவு 8 மணிக்குள் வரும் பெண்களுக்கு இலவசமாக உணவு அளிக்கப்படும் […]
அக்டோபர் 1 இன்று முதல் இந்தியாவில் பல பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை சாமானிய மக்களின் நிதி நிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வாகனங்களின் விலை உயர்வு, டெல்லியில் மின்சார மானியம், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள், அடல் பென்ஷன் திட்டம், மேலும் மியூச்சுவல் ஃபண்டுகளின் விதிகள் என்று பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் முக்கியமாக 10 மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் […]