கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் “பொன்னியின்செல்வன்”. இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே “பொன்னியின் செல்வன் -1″திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், “பகை மறவா பாண்டியரின் வாரிசுகள்” என்று மதுரையில் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகில் இருக்கும் அக்கரை சி.கிளப் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் அபர் ஜிந்தால் (39). இவர் ஒரு மருத்துவர். சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான டெல்லி அருகே இருக்கும் நொய்டாவுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். அதன் பிறகு நேற்று சென்னைக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து […]
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது இந்து அமைப்பினர் வீடுகள், அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதால் ஆஸ்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிட கோரியும், உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு செப்டம்பர் […]
நாகூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகள் கஷ்டத்தில் இருந்தபோது இந்தியா மட்டுமே அவர்களுக்கு உதவியது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். நாக்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது;- ஆன்மிகம் இந்தியாவின் ஆன்மாவாக உள்ளது. இந்தியா தனது சொந்த வாழ்க்கையின் மூலம் ஆன்மிகத்தின் அடிப்படையில் […]
கோவையில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இறைச்சி கடைகள் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும், கோவை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் இரண்டாம் தேதி எந்த விதமான இறைச்சியையும் விற்பனை செய்ய கூடாது என மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. காந்தி ஜெயந்தி அன்று ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை […]
அதிவேக இணைய வசதியை பெற, 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் இருக்கும் பிரகதி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி அலைவரிசையை, தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) […]
11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தில், அதற்கு காரணமான திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக அவரது பெற்றோர் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால், சிறுமி இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கும் செல்போனை […]
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர், போன் செய்து பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்தார். அந்த மர்மநபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து, காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மீஞ்சூர் அருகே மிரட்டல் விடுத்தவரின் செல்போன் சிக்னல் காட்டியது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், ரயில் நிலையத்தில் இருந்த மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர். இதுகுறித்து அந்த […]
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்புமை அடுத்த பதஜம்டாவில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் வேலை செய்து வருகிறார் துகாராம். இவர் பள்ளி வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்து பாலியல் ரீதியாக அவர்களிடம் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆறு மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அவர்களது பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் இதுகுறித்து எந்தவித […]