உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த திருமணத்தில் ஆதார் அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. இதனால் ஆதார் அட்டை இல்லாதவர்கள் சாப்பிடாமல் வெளியேறினர். உத்தரபிரதேச மாநிலத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் ஹாசன்பூரில் நடந்த திருமணத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமணத்திற்காக ஒரு குறிப்பிட்ட மக்களே அழைக்கப்பட்டிருந்தார்கள். அதே சமயம் திருமணம் முடியும் நிலையில் உணவு சாப்பிடும் அறைக்கு ஏராளமானோர் நுழைந்துள்ளனர். திருமணம் நடத்தியவர்களின் குடும்பத்தினர் பார்க்கும்போது அதில் யார் என்றே முகம் […]

சென்னை வண்ணாரப்பேட்டையில் பதினைந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் , இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேருக்கு தண்டனை விதித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷகிதா பானு இவர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். உறவினர் பெண்ணான 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் […]

சென்னை, மேடவாக்கம், பாபு நகர் மூன்றாவது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (50). இவர், சென்னை புறநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் நிலம் விற்பதாக கூறி 65 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. ஜெகன்நாதன் மதுரையில் தனக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை சண்முகத்திற்கு, கிரைய ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்காக பொது அதிகார ஆவணம் தயாரித்து, 65 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் […]

ரஷ்யாவில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துடன், 20 பேர் காயமடைந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உட்முர்டியா (Udmurtia) என்ற மாகாணத்தில் தலைநகரான Izhevsk என்ற இடத்தில் இன்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த காவலாளி ஒருவரையும், சில குழந்தைகளையும் கொன்றதாக […]

வெண்ணிலா கபடி குழுவில் நடித்துள்ள நபருக்குசிறுநீகம் செயலழிந்து மீண்டும் செயல்பட வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்ள்ளது. வெண்ணிலா கபடிக்குழுவில் நடித்த நடிகர் ஸ்ரீஹரி வைரவன் இவருக்கு கடந்த சில வாரங்களாகவே உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இவரை சோதித்த மருத்துவர்கள் சிறுநீரகங்கள் செயழிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். கால் , கை , முகம் வீங்கி நடக்கவே முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் , உடன் நடித்த நடிகர்கள் அவரது சிகிச்சைக்கு […]

காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விடுதலைக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிருப்தி தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் தலைமையில் மாற்றம் தேவை என 23 தலைவர்கள் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பினர். அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக […]

தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 28-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, […]

உணவு டெலிவரி செய்யும் ’’சோமேட்டோ’’ தற்காலிகமாக சேவையை நிறுத்தியுள்ளதால் வாடிக்கையாளர்கள் உணவு டெலிவரி செய்யும் சேவையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். டெல்லியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. சனிக்கிழமை இரவு ’’சோமேட்டோ’’-வில் உணவு டெலிவரி சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியபோது ’’ நாங்கள் தற்போதைக்கு உணவு ஆன்லைன் டெலிவரி சேவையை வழங்குவதில்லை’’ ’’விரைவில் வருவோம்’’ என்ற வாசகம் பரவத் தொடங்கியது. 3 நாட்கள் ஆகியம் இன்னும் […]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் (73). இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும், பதவிகளிலும் பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்து கடந்த மாதம் விலகினார். இதனைத் தொடர்ந்து விரைவில் புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாகவும், அக்கட்சியின் பெயரில் சுதந்திரத்தை குறிக்கும் ஆசாத் என்ற சொல் […]

நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன்தான் தொடர்ந்து வழிநடத்தி இந்த இயக்கத்தை மக்களுக்கான இயக்கமாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை மீட்டுத் தருகிற இயக்கமாக செயல்பட்டு வருகிறது.. அண்ணா, […]