கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலா பகுதியில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையால் அட்டமலா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வயநாட்டில் பெய்த கனமழைக்குப் பிறகு, முண்டகை பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அப்பகுதியில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கனமழை காரணமாக, புன்னா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கிராம சாலை வெள்ளத்தில் மூழ்கியது. சேற்று நீர் ஆற்றில் பாய்ந்தது. எங்காவது நிலச்சரிவு ஏற்பட்டதா […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இப்போதெல்லாம் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை. அப்படி ஒரு வேலை கிடைத்தாலும், நகரங்களில் சம்பளம் குறைவு, செலவுகள் அதிகமாக இருக்கும். வேலைகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், பல இளைஞர்கள் தங்கள் கிராமங்களில் தங்கி வேலை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தேனீ வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில் நல்ல வருமானத்தைத் தரக்கூடிய ஒரு தொழிலாகும்.. தேனுடன் சேர்த்து, அவற்றிலிருந்து பெறப்படும் பிற பொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் […]
Subhanshu Shukla has become the first Indian to visit the International Space Station in 40 years.
விவாகரத்து ஆகி தனியாக வசிக்கும் ஆண்களை காதல் வலையில் சிக்க வைத்து நகை பணத்தை பறித்து சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தின் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்த வீரதுர்கா நீலிமா (26) என்பவர், திருமணம் முடிந்த பின்னர் விவாகரத்து பெற்று தனியாக வசிக்கும் ஆண்கள் மீது பரிதாபம் காட்டும் போல் பழகி, நெருக்கம் காண்பித்து திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன் வலையின் […]
பல முறை ஏற்பட்ட தாமதங்களைச் சந்தித்த பிறகு ஆக்ஸியம் மிஷன் 4 மூலம் ஃபால்கன் ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் விண்வெளிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A இலிருந்து […]
2019-ம் ஆண்டு இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனை கைது செய்ததாக கூறப்படும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, தெற்கு வசிரிஸ்தானில் நடைபெற்ற தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) படையினருடனான மோதலில் உயிரிழந்துள்ளார். 37 வயதான மேஜர் ஷா, பாகிஸ்தானின் உயர்நிலை சிறப்பு சேவைக் குழுவான SSG பிரிவில் பணியாற்றி வந்தவர். TTP தாக்குதல்களைத் தடுக்க முன்னணி பதவியில் செயல்பட்டபோது, லான்ஸ் நாயக் ஜிப்ரானுல்லாவுடன் இணைந்து […]
இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களில் ஒருவரான இந்திய விமானப்படையின் (IAF) குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்தார்.. மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பல முறை இந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.. 1984 ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனின் சல்யுட்-7 விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியாக […]
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து காய்ச்சல் மற்றும் தலைவலிக்கான முக்கியமான மருந்தான பாராசிட்டமாலை தயாரிக்க முடியும் என இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு காட்டுகிறது. இந்த முயற்சியில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையிலிருந்து பாராசிட்டமால் தயாரிக்க எஷ்சரிச்சியா கோலி (E.coli) எனும் பாக்டீரியா பயன்படுத்தப்பட்டது. இது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாகும். இந்த கண்டுபிடிப்பின் மூலம், பாராசிட்டமால் தயாரிக்க தேவையான மூலப்பொருளை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெற […]
இந்தியா எந்த நாட்டில் இருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்கிறது தெரியுமா? நரேந்திர மோடி அரசு பிப்ரவரி 2022க்கு முன்பு ரஷ்யாவிலிருந்து தனது எண்ணெயில் 0.50 சதவீதத்தை மட்டுமே இறக்குமதி செய்து வந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் இந்த அளவு கணிசமாக உயர்ந்து 30–35 சதவீதமாக உயர்ந்தது. பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யா இப்போது இந்தியாவின் முக்கிய எண்ணெய் சப்ளையர்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தற்போதைய […]
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த அதிர்ச்சி தகவலை ஈரான் நீதித்துறை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து நேற்றைய தினம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த […]