வரலாற்றிலேயே முதன் முறையாக உலகின் மிக சக்திவாய்ந்த தொலைநோக்கியை(Telescope) பயன்படுத்தி சூரியனின் மேற்பரப்பை இதுவரை காணாத புதிய மற்றும் மிகத் துல்லியமான விவரங்களுடன் படம் மற்றும் வீடியோ மூலம் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இந்த புதிய பதிவுகளில், இந்த புதிய பதிவுகளில், முன்பு நேரடியாகக் காணப்படாத சிறிய சுழல் வடிவ இயக்கங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆய்வாளர்களின் விளக்கப்படி, சூரியனின் உள் பகுதியில் உள்ள அதிக வெப்பமுள்ள வாயுக்கள் தொடர்ந்து நகர்வதால், […]

நாட்டில் உள்ள ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றாக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு சமையலுக்கு தேவையான எல்பிஜி (LPG) இணைப்பு வழங்கப்படுகிறது. முன்பு பல குடும்பங்கள் விறகு, நிலக்கரி போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தி சமையல் செய்து […]

மழைக்காலத்தில் கார் ஓட்டும் போது பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று, ஏசி இயக்கிய சில நிமிடங்களில் கண்ணாடிகளில் பனி படர்வது. இதனால் சாலையை தெளிவாக பார்க்க முடியாமல், விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. ஆனால், காரில் இருக்கும் ஒரு சிறிய வசதியை சரியாக பயன்படுத்தினால், இந்த பிரச்சனையை சில நொடிகளில் சரி செய்ய முடியும். கார் கண்ணாடியில் பனி படர்வதற்கு முக்கிய காரணம், காருக்குள் இருக்கும் குளிர்ந்த காற்றுக்கும், […]

ஆன்லைன் கேமிங் செயலி மூலம் அறிமுகமான சிறுமியை கடத்திச் சென்று கொடூர சித்திரவதை செய்த வாலிபரை, செல்போன் சிக்னல் மற்றும் உணவு டெலிவரி முகவரியை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்லைன் கேமிங் செயலிகள் வழியாக தானேவைச் சேர்ந்த ஆகாஷ் (20) என்ற பிபிஏ மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்கள் தினத்தன்று […]

தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்தும் நோக்கில், பாட்டில் ஒன்றுக்கு 20 ரூபாய் வரை புதிய வரியை விதிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காலியாகும் மது பாட்டில்களை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டும் ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’ என்ற பெயரில் இந்த புதிய வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, 2006-ஆம் ஆண்டின் மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்வதற்கான […]

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை கண்டறிந்து அவற்றை மூடுவதற்கும் அல்லது வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கும் வசதியாக, டாஸ்மாக் நிறுவனம் விரிவான கணக்கெடுப்புப் பணியை தொடங்கியுள்ளது. கடந்த 2003-ஆம் ஆண்டின் மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்குள்ளும், பிற பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிற்குள்ளும் மதுக்கடைகள் அமைக்கப்படக் கூடாது. இருப்பினும், பல இடங்களில் […]

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்றாகும். உலகம் முழுவதும் இதன் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் மார்பக புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்பகத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி வளரத் தொடங்கும்போது, அது நாளடைவில் கட்டி அல்லது புற்றுநோயாக மாறக்கூடும். மார்பக புற்றுநோய் வருவதற்கு வயது, மரபணு காரணங்கள், குடும்ப வரலாறு போன்ற சில காரணிகளை மாற்ற முடியாது. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை […]

தலைவலி என்பது பலரும் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை. மன அழுத்தம், தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவு, நீண்ட நேரம் செல்போன் அல்லது கணினி பயன்படுத்துவது, நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். தலைவலி வந்தவுடன் பலரும் உடனடியாக ஒரு கப் டீ அல்லது காபி குடிப்பார்கள். காபியில் இருக்கும் கஃபைன் தலைவலியை குறைக்குமா அல்லது மாறாக தலைவலியை அதிகரிக்குமா என்ற […]

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு தீர்வு காணும் வகையில், பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள இருபோக சாகுபடிப் பகுதிகளில் முதல்போக பாசனத்திற்காகவும், அதேபோன்று தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் பெரியாறு அணையில் இருந்து இன்று (ஆகஸ்ட் 8) முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பாசனத்திற்கு வினாடிக்கு […]

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை திரும்பப் செலுத்துமாறு வலியுறுத்தும் போது, கடன் வசூல் முகவர்கள் (Recovery Agents) வரம்பு மீறிச் செயல்படுவதை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ➣ கடன் வழங்கிய நிறுவனங்களோ அல்லது வசூல் முகவர்களோ வாடிக்கையாளர்களைக் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நேரத்தை தாண்டி […]