இன்றைய சமூகத்தில் பல குடும்பங்கள் சீர்குலைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கள்ளக்காதல் பார்க்கப்படுகிறது. இதன் பாதிப்பு கணவன், மனைவி மட்டுமின்றி, எந்தத் தவறும் செய்யாத குழந்தைகளின் வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கிறது. குறிப்பாக, கள்ளக்காதல் தொடர்பான தகராறுகள் மற்றும் மோதல்களால் அப்பாவி குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூலகிரி தாலுகா, […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இன்றைய காலகட்டத்தில், பல இளைஞர்களிடம் “எனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்ற மனநிலை அதிகரித்து வருவது கவலைக்கிடமான ஒன்றாக உள்ளது. சிறுவயதிலிருந்தே பகிர்ந்து கொள்வது, விட்டுக் கொடுப்பது, பிறரின் உணர்வுகளை மதிப்பது போன்ற நல்ல பண்புகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். இத்தகைய மதிப்புகள் குறைவதால்தான் காதல், கோபம், பழிவாங்கும் மனப்பான்மை உள்ளிட்ட காரணங்களால் பல கொடூரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்று சமூக […]
பீகார் மாநிலத்தில் உள்ள மான்சி ரயில் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஜூன் 11-ஆம் தேதி விரைவு ரயிலில் பயணம் செய்த மின்சாரத்துறை ஊழியர் தேவ்குமார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். தொழில்நுட்ப ஆதாரங்கள், அறிவியல் தடயங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்த தேவ்குமாரின் மனைவி சுமிதா […]
ராஜஸ்தான் மாநிலத்தின் தௌசா மாவட்டத்தில் பள்ளிச் சீருடை அணிந்திருந்த இரண்டு சிறுமிகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி, அதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, வைரலாகும் காட்சிகளில் இரண்டு சிறுமிகளை சிலர் பாழடைந்த கட்டடம் ஒன்றை நோக்கி அழைத்துச் செல்வது போன்ற […]
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், ரூ.11 லட்சம் மதிப்பிலான போலி 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த டிராவல்ஸ் தொழிலதிபர் ஷபீக் ரகுமான் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.11.21 லட்சம் மதிப்பிலான அசல் 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள […]
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. சாதாரண ஆறுதல் ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டி, 10 கோல்கள், பரபரப்பான திருப்பங்கள் மற்றும் கடைசி நிமிடம் வரை நீண்ட விறுவிறுப்புடன் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்தது. அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்ததால் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் தாமஸ் டூச்சல் கடும் […]
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை மையத்தை அமைச்சர் அருண் ராஜ் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் ‘கில்லி’ பட காட்சி திரையிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நேற்று (ஜூலை 17) சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை (High-pressure oxygen therapy)மையத்தைத் திறந்து வைத்தார். இந்த சிகிச்சை மூலம் […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டாச்சியர் அலுவலகங்களில் நேற்று (ஜூலை 17)லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனையில் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு ,லஞ்சம் வாங்கிய பலர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லஞ்சம் வாங்குவோர் குறித்து புகார் அளிக்க வாட்ஸாப் எண் மற்றும் இமெயில் முகவரி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் நில அளவை போன்ற […]
பொதுமக்கள் மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்களுக்காக Public Grievance Portal என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,பொதுமக்கள் மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்கள் தங்களது புகார்கள் மற்றும் சந்தேகங்களை எளிதாக பதிவு செய்து தீர்வு பெறும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி CAMS இணையதளத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. தலைமை தணிக்கை இயக்குநரின்கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை, மாநில அரசு தணிக்கைத் துறை, […]
தேங்காய் என்பது நமது அன்றாட உணவில் முக்கிய இடம் வகிக்கும் இயற்கை உணவுப் பொருளாகும். சமையலில் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கும் சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது. மேலும், தலைமுடி பராமரிப்பிலும் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்கள் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேங்காயில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அதை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு தேவையான […]

