பித்ருக்களின் ஆசியைப் பெறுவதற்கு உகந்த தினமாக சொல்லப்படும் அமாவாசை திதி, மாதந்தோறும் வந்தாலும் ஒரு சில மாதங்களில் வரும் அமாவாசைக்குத் தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில், தை, ஆடி மற்றும் மகாளய அமாவாசையை போலவே, இன்று (செவ்வாய்க்கிழமை) மாசி மாத அமாவாசையும் ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் மற்றும் தான தர்மங்கள் மூலம் குடும்பத்தில் நிலவும் தடைகள் நீங்கி, சுபிட்சம் உண்டாகும் என்பது […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சிங்கப்பூரில் எலக்ட்ரிசியனாக பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், தனது மனைவி சந்தனமாரியம்மாளின் இன்ஸ்டாகிராம் நடவடிக்கைகள் மற்றும் பண விவகாரங்களால் ஆத்திரமடைந்து, அவரை நடுரோட்டில் வைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். 2017இல் திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். சிங்கப்பூரில் கடினமாக உழைத்து பாலமுருகன் அனுப்பி வைத்த லட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் நகைகளை சந்தனமாரியம்மாள் முறையாக பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதிலும், […]
இந்தியாவில் ஒரு காலத்தில் திருமணம் என்பது குடும்ப பெரியவர்களால், சாதி மற்றும் ஜாதக பொருத்தங்களை அடிப்படையாக கொண்டு மட்டுமே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் (2016-2025) இந்த நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளதை ‘ஜீவன்சாதி’ (Jeevansathi) தளம் நடத்திய விரிவான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்றைய இளைஞர்கள் திருமணத்தை ஒரு கடமையாகப் பார்க்காமல், தங்களுக்குப் பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாழ்வியல் முடிவாகவே கருதுகின்றனர். இதனால், திருமணத்திற்கான சராசரி வயது 27-லிருந்து […]
தமிழ்நாட்டை போலவே அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் நீண்டகாலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டு வந்த இந்தத் திட்டத்தில், தற்போது ஒரு அதிரடி மாற்றத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கல்வியில் நவீனத் தொழில்நுட்பத்தைப் புகுத்தும் நோக்கில், இனி 6-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் விலையில்லா […]
குடும்பங்களில் சொத்துத் தகராறுகள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம், உயில் எழுதப்படாததும் மற்றும் வாரிசுரிமைச் சட்டங்கள் குறித்த தெளிவற்ற புரிதலுமே ஆகும். பொதுவாக, தந்தையின் சொத்து என்பது ‘மூதாதையர் சொத்து’ (Ancestral Property) என்றும், அதில் ஒரு குறிப்பிட்ட வாரிசுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும் பலர் தவறாக கருதுகின்றனர். ஆனால், இந்தியச் சட்டப்படி வாரிசுகள் முறைப்படுத்தப்பட்ட பட்டியலின் (Systematic Order) கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஒரு பெண் இறந்துவிட்டால், […]
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருந்தது, சாமானிய மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. தங்கம் இனி எட்டா கனியாகிவிடுமோ என்று கவலைப்பட்டவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக, கடந்த ஜனவரி 29 தங்கத்தின் விலை படிப்படியாகச் சரியத் தொடங்கியுள்ளது. தற்போது ஒரு சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் குறையக்கூடும் என்ற அதிரடி […]
தமிழக அரசியல் களத்தில் சட்டமன்ற தேர்தல் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ள நிலையில், 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் வெளியேறிய சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் நிலவிய பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் முதலமைச்சரின் பதிலுரைக்குப் […]
கோயம்புத்தூரில் நர்சிங் பயின்று வந்த மாணவி நீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது காதலனான பொறியியல் மாணவர் ஆர்யனுடன் ஊட்டியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். சம்பவத்தன்று விடுதி அறையில் மது அருந்தியதோடு, ஊட்டி மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக கிடைக்கும் ‘மேஜிக் மஷ்ரூம்’ எனப்படும் போதை காளான்களையும் இருவரும் உட்கொண்டுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் இருவரும் உல்லாசமாக இருந்தபோது, நள்ளிரவில் நீலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால், போதையின் உச்சத்தில் இருந்த […]
இன்றைய வேகமான கார்ப்பரேட் உலகில், ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் தங்கி உழைப்பது என்பது புத்திசாலித்தனமான முடிவா அல்லது பொருளாதார இழப்பா என்ற விவாதம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. முந்தைய காலங்களில், ஒரே அலுவலகத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிவது ஒரு பெருமையாக கருதப்பட்டது. ஆனால், தற்போதைய இந்திய வேலைவாய்ப்பு சந்தையில், ஒரு நிறுவனத்திற்கு விசுவாசமாக இருப்பதை விட, அடிக்கடி வேலை மாறுபவர்களே அதிக லாபம் ஈட்டுகிறார்கள் என்ற கசப்பான உண்மை […]
தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், ஊழியர் சங்கங்கள் போராட்டக் களத்தில் அதிரடியாக குதித்துள்ளன. ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் முறையான ஓய்வூதியம் போன்ற அடிப்படைத் தேவைகளை வலியுறுத்திப் பலமுறை கோரிக்கை விடுத்தும், அரசுத் தரப்பில் மெத்தனப் போக்கு நீடிப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சூழலில், தமிழகம் முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஊழியர் சங்கங்கள் ஒருமனதாக முடிவு […]

