தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் செல்வாக்குமிக்க அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி களம் இறங்கியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இதுதொடர்பான சந்திப்பு நடைபெற்றது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் தலைமையிலான முக்கிய நிர்வாகிகள், எடப்பாடி […]

பெண்களுக்கு ஆண்களை ஈர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்து கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியதாக கூறப்படும், “செக்ஸுவல் இன்டெலிஜென்ஸின் காட்மதர்” (Godmother of Sexual Intelligence) என்ற பெயரில் அறியப்படும் பிரபல இன்ஃப்ளூயன்சர் ஷோ யுவான் மீது சீன அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர். ஹுனான் மாகாணத்தின் சாங்ஷா நகரில் உள்ள சந்தை ஒழுங்குமுறை துறை, பொது பாதுகாப்பு மற்றும் கலாச்சார அதிகாரிகளுடன் இணைந்து, ஷோ யுவான் வணிக செயல்பாடுகளை ஆய்வு செய்யும் சிறப்பு […]

தமிழ்நாட்டில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதோடு, ஊரகப் பகுதிகளில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில், மாநில தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை காளான் சாகுபடிக்கு மிகப்பெரிய ஊக்கமளித்து வருகிறது. குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரும் காளான் வளர்ப்பை ஒரு லாபகரமான மாற்றுத் தொழிலாக மாற்றும் நோக்கில், அரசு தற்போது தாராளமான மானிய உதவிகளை அறிவித்துள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், காளான் உற்பத்தி […]

சென்னை அடையாறு பகுதியில் கடந்த சில நாட்களாக காகங்கள் திடீரென மர்மமான முறையில் இறந்து விழுந்த சம்பவம், மாநகர மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. இந்த மர்ம மரணங்களுக்கான பின்னணியை ஆய்வு செய்ததில், தற்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை ஆய்வு செய்த போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், அந்த பறவைகளுக்கு ‘H5N1’ எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்ததை உறுதி செய்துள்ளது. இது […]

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.. கடந்த 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.. 2-ம் தேதியில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது ராகுல்காந்தி பேசும் போது முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவவே எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்த தகவல்கள் சுட்டிக்காட்ட விரும்பினார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.. இதற்கு […]

ஆரோக்கியத்தை பேணுவதற்கு நடைப்பயிற்சி மிகவும் எளிதான மற்றும் செலவு குறைந்த பயிற்சிகளில் ஒன்றாகும். தினமும் சிறிது நேரம் நடக்கும் பழக்கம் உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் அளவற்ற நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, காலை நேரம் நடைப்பயிற்சிக்கு மிகவும் உகந்த நேரமாகும். ஏனெனில் அந்த நேரத்தில் வானிலை அமைதியாகவும், காற்று மாசு குறைவாகவும் சுத்தமாகவும் இருக்கும். அப்போது நமது உடல் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசித்து புத்துணர்ச்சி பெறுகிறது. தினமும் குறைந்தது 30 முதல் […]

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு புகாரின் பேரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. மேலும் இந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது. அஜித் கொலை வழக்கில் புதிய திருப்பமாக பல அதிர்ச்சி தகவல்கள் […]

பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை வாஹினி என்ற பத்மக்கா (48) புற்றுநோயால் காலமானார். நடிகை வாஹினி தெலுங்கு சீரியல்கள், சில திரைப்படங்களிலும் குணச்சித்திரக் கலைஞராகச் சிறந்து விளங்கினார். வாஹினி சில தமிழ் சீரியல் மற்றும் படங்களில் நடித்துள்ளார்.. வாஹினி கடந்த சில காலமாக மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். நோய் முற்றியதால், சிகிச்சைக்காக பெரும் தொகை தேவைப்பட்டது. சிகிச்சைக்கான பணமின்மை மற்றும் உடல்நிலை மோசமடைந்ததால், வாஹினி புதன்கிழமை அன்று […]

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. பாலக்காடு நகருக்கு அருகே ஒரு வேனில் இருந்து வெடிப் பொருட்கள் நிரப்பப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெட்டிகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சரக்கு முற்றிலும் ரகசியமாக கொண்டு செல்லப்பட்டதால், இந்த மீட்பு நடவடிக்கை அப்பகுதி முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மருத்துவக் கல்லூரிக்கு அருகே அந்த வாகனத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய பெட்டிகளையும், 20-க்கும் மேற்பட்ட […]

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் பணிபுரியும் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.. இவர்களில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒருவர். பணி நீக்கம் செய்யப்பட்ட பல ஊழியர்களை சமூக ஊடகங்களில் உணர்ச்சிப்பூர்வமான செய்திகளைப் பகிர்ந்தனர்.. உலகின் மிகவும் செல்வாக்குமிக்க செய்தி நிறுவனங்களில் ஒன்றுக்கு இது ஒரு பேரழிவு தருணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். மூத்த சர்வதேச […]