தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் என்.ஆனந்த், கடந்த கால அரசியல் கணிப்புகளை தவிடுபொடியாக்கி மக்கள் தவெக மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். சட்டசபையில் துறை சார்ந்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்யுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நெருக்கமாகப் பழகி வருவதை நினைவுகூர்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, […]

திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் கதாநாயகனாக நடித்து, அவரது திரையுலகப் பயணத்தின் கடைசி திரைப்படமாக உருவான “ஜனநாயகன்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகக் கலவையான கருத்துகளைப் பெற்றபோதிலும், ரசிகர்களாலும் ஆதரவாளர்களாலும் திரையரங்குகளில் இத்திரைப்படம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைப்பில் […]

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது என்றும், அப்பணிகளுக்கு தமிழ் மொழித் தகுதி கட்டாயம் என்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் கடுமையான பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், 1,797 பேருந்து நடத்துனர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான பணி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ‘எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்’ என்ற தனியார் நிறுவனத்திற்கு ரூ.61.56 […]

​கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 சொகுசு வாகனங்களை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். ​கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சொகுசு கார்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, ஊத்தங்கரை காவல்துறையினர் சினிமா பாணியில் தீவிர வியூகம் அமைத்து 750 கிலோ குட்கா மற்றும் 3 சொகுசு வாகனங்களைப் பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்துள்ளனர். […]

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தென்மண்டல கவுன்சிலின் 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு, சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்குகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டின் குழுத் துணைத் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் நடைபெறும் இந்த உயர்மட்ட மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக […]

ஆண்கள் வயதாகும்போது சிறுநீர் கழிப்பதில் சில மாற்றங்கள் ஏற்படுவது பொதுவானது. இதனால், தொடர்ந்து ஏற்படும் சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளையும் வயதாவதன் இயல்பான அறிகுறிகள் என பலரும் அலட்சியப்படுத்துகின்றனர். அதேநேரத்தில், ஒவ்வொரு சிறுநீர் பிரச்சினையும் புரோஸ்டேட் புற்றுநோயைக் குறிக்காது என்பதும் முக்கியம். ஆனால், புதிதாகத் தோன்றும் அல்லது தொடர்ந்து மோசமடையும் அறிகுறிகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். சிறுநீர் பிரச்சினை என்றாலே புற்றுநோயா? வயதான ஆண்களிடம் காணப்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று […]

குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை நீண்ட நேரம் சமூக வலைதளங்களில் இருக்க வைக்கும் வகையில் தங்களது தளங்கள் வடிவமைக்கப்பட்டதாக மெட்டா நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் குறித்து பல முக்கியமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொழில்நுட்ப உலகில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் 29 மாகாணங்கள் இணைந்து மெட்டாவுக்கு எதிராக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. குழந்தைகளின் மனநலனை பாதிக்கும் […]

பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த பரபரப்பான கொலை வழக்கில் மதுரை நீதிமன்றம் தற்போது முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவரின் குடும்பத்தினர் நள்ளிரவில் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான இந்த வழக்கில் இளம்பெண் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, சம்பவம் நடைபெற்ற விதம், உயிரிழந்தவர்களின் நிலை மற்றும் போலீஸார் சேகரித்த ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இருதரப்பு வாதங்களும் […]

திருமண வாழ்க்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட பிரச்சினை, ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் நீண்ட சட்டப் போராட்டத்துக்குள் தள்ளியதாக கூறப்படுகிறது. இறுதியில் வழக்கை முடித்துக்கொள்ள ரூ.10 லட்சம் வரை செலவிட்டதாக அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது. விவாகரத்து தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், வழக்கு மேலும் நீண்டால் நீதிமன்றச் செலவுகள் மற்றும் வழக்கறிஞர் கட்டணம் அதிகரிக்கக்கூடும் என அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. […]

மகாராஷ்டிராவில் கணவர் காணாமல் போனதாக கூறி நாடகமாடிய மனைவி, தனது காதலனுடன் இணைந்து அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வர்தா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கணவர் திடீரென காணாமல் போனதை அடுத்து, அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதற்கிடையே, கணவரை காணவில்லை என மனைவியும் வெளியில் கூறி வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில், அப்பகுதியில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் […]