தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கி உள்ளது.. கடந்த ஆண்டில் என்.டி.ஏ கூட்டணியில் விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இதையடுத்து டிடிவி தினகரனும் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகியதுடன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. ஆனால் தற்போது டிடிவி தினகரனின் அமமுக என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துவிட்டது.. ஓபிஎஸ் தரப்பு, திமுக அல்லது தவெக உடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.. […]

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், பான் கார்டு (PAN) தவறாகப் பயன்படுத்தப்படும் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. மற்றவர்களின் பான் விவரங்களைப் பயன்படுத்தி அனுமதியின்றி சிலர் கடன் வாங்கிய சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இருப்பினும், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் பெயரில் யாராவது கடன் வாங்கியுள்ளார்களா என்பதைக் கண்டறியலாம் என்று நிதி நிபுணர்கள் கூறுகிறார்கள். கடன் அறிக்கையைச் சரிபார்க்கவும் உங்கள் பான் எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்து கடன்களும் கடன் […]

இன்று 150 பயணிகளுடன் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், எஞ்சின் செயலிழந்ததால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டெல்லி விமான நிலையத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து SG121 விமானம் புறப்பட்டபோது, ​​அதன் இயந்திரங்களில் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை ஊழியர்கள் கண்டறிந்தனர். முன்னெச்சரிக்கையாக, விமானிகள் விமானத்தைத் திருப்பி டெல்லிக்குத் திரும்ப முடிவு செய்தனர். முன்னுரிமை தரையிறக்கம் மற்றும் மருத்துவ மற்றும் தீயணைப்பு சேவைகள் […]

ஈரானில் திங்கள்கிழமை, ஆயிரக்கணக்கான மக்களின் கைபேசிகளில் மர்மமான எச்சரிக்கை செய்தி ஒன்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த செய்தியில், பாரசீக மொழியில் “அமெரிக்க ஜனாதிபதி அதிரடி மனிதர். காத்திருந்து பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி தெரியாத ஒரு எண்ணிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம், டொனால் டிரம்ப் ஈரான் அரசை கடுமையாக விமர்சித்து வரும் சூழலில் நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியில் ராணுவ கப்பல்கள் மற்றும் போர் […]

உடலில் உள்ள பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய சில அறிகுறிகளும் எச்சரிக்கை அறிகுறிகளும் உள்ளன. அவற்றைப் புரிந்துகொண்டு முன்கூட்டியே சரியான சிகிச்சையை எடுத்துக் கொண்டால், உடல்நலப் பிரச்சினையை குணப்படுத்த முடியும். இதனால், சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ளன. அவற்றில் ஒன்று இடது கை வலி, இது மாரடைப்பின் அறிகுறியாகும். இது மாரடைப்புக்கு முன் தோன்றும் அறிகுறிகளில் ஒன்றாகும். மேலும், இந்த அறிகுறியை அங்கீகரிப்பது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.. அதிகமுகவினர் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் பிரதமர் மோடி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு புகழாரம் சூட்டி உள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ […]

ஜார்க்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்டத்தில் நேற்று மாலை விமான ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் அதில் பயணித்த 7பேரும் உயிரிழந்தனர். மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார். ராஞ்சியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் சிமாரியா அருகே விபத்துக்குள்ளானது. ராஞ்சி விமான நிலையத்திலிருந்து இரவு 7.11 மணிக்கு புறப்பட்டு டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தது. விமான ஆம்புலன்ஸ் ரெட்பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்பட்டது. […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒருபுறம் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டில் மும்முரம் காட்டி வருகின்றன. மற்றொருபுறம், இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு, வாக்காளர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழகத் […]

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், சசிகலா நேற்றைய தினம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பாதையில் தானும் பயணிப்பதாக அவர் குறிப்பிட்டார். ஒரு பெரிய காரியத்தை […]