செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி அதிரடியான பல வாக்குறுதிகளை அள்ளிவீசினார். அதிமுக என்பது எளிய மக்களுக்காகவே உருவான பேரியக்கம் என்று புகழாரம் சூட்டிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டு, தற்போது திமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் முக்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். குறிப்பாகப் பெண்களைக் […]

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தங்களது பலத்தை நிரூபிக்க இப்போதே தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுமே மாற்றுக் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தங்கள் பக்கம் ஈர்ப்பதில் தீவிரமான போட்டியில் இறங்கியுள்ளன. இந்த முறை எப்படியாவது ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்ற முனைப்பில் உள்ள அதிமுக, பாஜக உடனான கூட்டணி […]

லக்னோவின் பரபரப்பான கிரீன் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல ஆசிரியர் சூரிய பிரதாப் சிங் (35), தனது லிவ்-இன் பார்ட்னர் மற்றும் அவரது இரு மகள்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தையே அதிரவைத்துள்ளது. ஆசிரியர் சூரிய பிரதாப், ரத்னா (46) என்ற விதவை பெண்ணுடன் ஏற்பட்ட உறவால் தனது உயிரைப் பறி கொடுத்துள்ளார். டியூஷன் படிக்க வந்த ரத்னாவின் மகள்களே, தங்களது தாயை திருமணம் […]

வரும் 2026இல் உடல் எடையை குறைக்க திட்டமிடுபவர்களுக்கு ஆப்பிள் சீடர் வினிகர் (Apple Cider Vinegar) ஒரு வரப்பிரசாதமாக அமையலாம். இதனை நம்முடைய தினசரி வாழ்க்கை முறையில், குறிப்பாக இரவு நேரப் பழக்கவழக்கத்தில் சேர்த்துக்கொள்வது உடல் எடையை குறைப்பதில் ஆச்சரியமான மாற்றங்களை ஏற்படுத்தும். ஆப்பிள் சீடர் வினிகர் என்பது ஆப்பிள்களை நசுக்கி நொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்தச் செயல்முறையின் போது ஆப்பிளில் உள்ள சர்க்கரை சத்துக்கள் முதலில் ஆல்கஹாலாகவும், […]

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே யலமஞ்சிலி பகுதியில், நேற்று நள்ளிரவு டாடா நகர் – எர்ணாகுளம் விரைவு ரயிலில் (Express Train) ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்ததில், ஒரு பயணி பரிதாபமாக உயிரிழந்தார். நள்ளிரவு சுமார் 12.45 மணி அளவில் ரயிலில் தீப்பிடித்ததாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. விபத்துக்குள்ளான ஒரு பெட்டியில் 82 பயணிகளும், மற்றொரு பெட்டியில் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் களத்தின் முக்கியமான ஆளுமையுமான ஆர்.நல்லகண்ணு (101), உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தனது இல்லத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. அதற்கான தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு, நேரடியாக உணவு உட்கொள்வதில் சிரமம் இருந்ததால், வயிற்றுப் பகுதியில் குழாய் பொருத்தப்பட்டு […]