மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதங்களை வீசியதால் இந்த 9 பேரும் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, அமரிந்தர் சிங் ராஜா வாரிங், கிரண் குமார் ரெட்டி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் அடங்குவர். இந்த எம்.பி.க்களில் 7 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சு. வெங்கடேசன் ( […]

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, தமிழக அரசியலில் மீண்டும் ஒரு அதிரடி மாற்றத்தை உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார். தற்போதைய திமுக ஆட்சியை அகற்றி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து பொற்கால ஆட்சியை மீண்டும் மலரச் செய்வதே தனது வாழ்நாள் லட்சியம் என அவர் சூளுரைத்துள்ளார். தனது 39 ஆண்டுகால நீண்ட அரசியல் பயணத்தையும், அனுபவத்தையும் சுட்டிக்காட்டிய சசிகலா, இன்றைய அரசியல் சூழலில் தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்க தன்னால் முடிந்த […]

டிரம்ப்பின் அழுத்தத்தின் காரணமாகவே பிரதமர் மோடி இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி. ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார். நான்கு மாதங்களாக முடங்கிக் கிடந்த இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் திடீரென்று எப்படி கையெழுத்தானது என்று கேள்வி எழுப்பினார். மேலும், அந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவரங்களையும் மத்திய அரசிடம் இருந்து அவர் கோரினார். பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டார் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சமீப காலங்களில், பாத்திரங்களைக் கழுவுவதற்கு ஸ்க்ரப்பர்கள் மற்றும் பிரஷ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பாத்திரங்களைக் கழுவுவதை எளிதாக்குகிறது. இது கைகளில் ஒட்டாது என்றும், எப்போதும் கடினமாக இருக்கும் என்றும் நாம் நினைக்கிறோம். இருப்பினும், பாத்திரங்களில் உள்ள கிருமிகளை அகற்ற இந்த பிரஷ்ஷை முறையாகப் பராமரிக்கவில்லை என்றால், அது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, இந்த பிரஷ்ஷை எவ்வளவு அடிக்கடி மாற்ற வேண்டும், அதை எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றி […]

பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. அவரது இறுதிச் சடங்குகள் ஜனவரி 4, புதன்கிழமை அன்று சென்னையில் உள்ள ஆலப்பாக்கத்தில் நடைபெறும். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார்.. எஸ்.பி. வெங்கடேஷ் தனது இசைப் பயணத்தை 1960-களின் பிற்பகுதியில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களுக்கான இசைக்குழுக்களில் ஒரு உறுப்பினராகத் தொடங்கினார். பல ஆண்டுகள் திரைக்குப் பின்னால் பணியாற்றிய நிலையில், […]

சிலர் இரவில் தூங்கும் போது குறட்டை விடுகிறார்கள். இது அருகில் உறங்குபவர்களுக்குத் தொந்தரவாக இருக்கலாம். சோர்வு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் முதுமை ஆகியவை குறட்டைக்கு முக்கிய காரணங்களாகும். ஆனால், இவை தவிர, மனித உடலில் ஏற்படும் மற்றொரு வைட்டமின் குறைபாட்டாலும் தூக்கத்தின்போது குறட்டை ஏற்படலாம் என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அமெரிக்காவின் தேசிய உயிரி தொழில்நுட்பத் தகவல் மையத்தால் (NCBI) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, வைட்டமின் D குறைபாட்டிற்கும் […]

சென்னை தி.நகர் வண்டிக்காரன் சாலையில் பத்மா என்ற தூய்மை பணியாளர் கடந்த 11-ம் தேதி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.. அப்போது குப்பையோடு கிடந்த கவர் ஒன்றில் இருந்த 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்தார்.. இதையடுத்து பத்மா அந்த தங்க நகைகளை பாண்டிபஜார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.. ஏழ்மையான சூழலிலும் பத்மாவின் இந்த நேர்மையான செயல் பலராலும் பாராட்டப்பட்டது.. பல்வேறு தரப்பினரும் பத்மாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் முதல்வர் […]

போதை மாடல் திமுக ஆட்சி, இனியும் தொடர்ந்தால், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம், மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த […]

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்களுக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்க உள்ளதாக தவெக தலைமை தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் […]