தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்தது. இதனால், வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாகவே காலை முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக […]

திரைத்துறையை பொறுத்தவரை ஓரிரு படங்கள் சேர்ந்து நடித்தாலே நடிகர்கள் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் பரவத் தொடங்கிவிடும். இந்த கிசுகிசுக்களில் சிக்காமல் இருக்கும் பிரபலங்கள் மிகவும் குறைவு என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா ஜோடி அடிக்கடி இதுபோன்ற கிசுகிசு செய்திகளில் சிக்கி வருகின்றனர். மேலும் இந்த ஜோடி டேட்டிங்கில் இருந்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அந்த […]

கோவை மாநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் நடவடிக்கைகளில் மாநகர போலீஸ் ஆணையர் சரவண சுந்தர் தலைமையிலான போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் கோவைக்கு வந்து கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போன்ற உயர் ரக போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் என்ற ரகசிய தகவலின் அடிப்படையில், பல்வேறு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் […]

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக அந்நாட்டு உச்ச தலைவர் காமெனி தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாடு முழு அளவிலான பிராந்திய மோதலைத் தூண்டும் என்று ஈரான் எச்சரித்தது. “எந்தவொரு அமெரிக்க தலையீடும் இப்பகுதியில் ஒரு முழுமையான போருக்கு வழிவகுக்கும்” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் […]

அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 6-வது நாளாக இன்று புதன்கிழமையிலும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி […]

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனைங்களை திரும்ப ஒப்படைக்க தயார் என்று அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது. 3 நாட்கள் நடந்த இந்த சோதனையில் ரூ.1000 கோடி […]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு விழா, ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “ கேரள பாரம்பரிய முறைப்படி திருச்செந்தூர் முருகன் பூஜை செய்யப்படுகிறது. எனவே தற்போது நடைபெறும் […]

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகிய்ள்ளது. இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. வயது வரம்பு: இப்பதவிகளுக்கான வயது வரம்பு தகவல் அறிவிப்பில் இடம்பெறவில்லை. பதவி மற்றும் கல்வித்தகுதி * மருத்துவ அதிகாரி பதவிக்கு எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். * மருத்துவ அதிகாரி ( […]

பாகிஸ்தானில் உள்ள ஜகோபாபாத் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக அந்த வழியாக சென்ற ஜாஃபர் ரயில் தடம் புரண்டது. இந்த சம்பவம் பலுசிஸ்தான் வழியாக ரயில் பயணத்தின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியது. பெஷாவரில் இருந்து குவெட்டாவுக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு காரணமாக தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இந்த வெடிப்பு மூன்று அடி அகலமான பள்ளத்தை உருவாக்கி, கிட்டத்தட்ட 6 அடி ரயில் பாதையை அழித்ததாக […]