தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழல், விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தனது கூட்டணியை பலமாக நிலைநிறுத்தி இந்த முறையும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இருப்பினும், திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகள் கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கோரி குரல் எழுப்பி வருவது, அவருக்குப் பெரும் சவாலாக […]

குளிர்காலம் வந்துவிட்டதால், வெந்நீர் குடிக்கும் பழக்கம் பலரிடையே அதிகரித்து வருகிறது. உடலை சூடாக வைத்திருக்கவும், எடை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் பலர் மிகவும் சூடான நீரைத் தேர்வு செய்கிறார்கள். இருப்பினும், எல்லா சந்தர்ப்பங்களிலும் சூடான நீர் நல்லதல்ல. சிலருக்கு, இது நன்மை பயக்காது, ஆனால் பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதனால் தான் யார் சூடான நீரைக் குடிக்கக்கூடாது, ஏன் அதைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து […]

தமிழ்நாட்டில் இன்னும் 5 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆளும் திமுக ஒருபுறம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி, மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. மறுபுறம், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக எப்படியும் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் வியூகங்களை வகுத்து வருகிறது. […]

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்X நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், தனது துணைவி மற்றும் Neuralink நிர்வாகி ஷிவோன் சிலிஸ்ள் பாதி இந்தியர் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்குப் பிறந்த மகன்களில் ஒருவரின் இடைப்பெயர் ‘சேகர்’ (Sekhar) என்று வைத்திருப்பதாகவும் கூறினார். இந்த பெயர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி மற்றும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் பெயரிடம் இருந்து எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த தகவலை அவர் […]

தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி வரும் நிலையில், தற்போது திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையில் உள்ள 19 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மாவட்டச் சுகாதார அலுவலகம், திருப்பூர் அரசு மருத்துவக் […]

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனித வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த உலோகமாக தங்கம் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. மன்னர்களின் நகைகள் முதல் சாதாரண மக்களின் திருமணப் பொருட்கள் வரை, நாடுகளின் பெட்டகங்கள் முதல் உலகப் பொருளாதாரத்தின் இருப்புக்கள் வரை.. தங்கம் எனப்படும் உலோகம் அனைத்தையும் பாதிக்கிறது. ஆனால் பூமியில் மொத்தம் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ‘விஷுவல் கேபிடலிஸ்ட்’ என்ற சர்வதேச […]

வருடம் முழுவதும் மற்ற விரதங்களை மேற்கொள்ள முடியாதவர்கள் கூட, கார்த்திகை மாதத்தில் வரும் மகா தீபத் திருநாளில் ஒரு நாள் முழுவதும் விரதத்தைப் பின்பற்றினால், சிவபெருமானின் அருள் முழுமையாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அருணாசலேஸ்வரரின் ஜோதித் திருநாளாகக் கருதப்படும் கார்த்திகை தீபம், ஆண்டிற்கு ஒருமுறை ஈசன் அர்த்தநாரீஸ்வரராக வெளிப்படும் உன்னத தருணமுமாகும். இந்த நாளில் தீபம் ஏற்றுவது ஒளி, ஆன்மீகம் மற்றும் தூய்மையை ஒருசேரப் பெற்றுத் தரும் என்றும், இறைவனை […]