தமிழக மற்றும் புதுவை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய கைது நடவடிக்கைகள் மற்றும் படகுப் பறிமுதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டி, தமிழக மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்வதுடன், அவற்றைப் பின்னாளில் அந்நாட்டு அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகள் மீனவக் குடும்பங்களை நிலைகுலையச் செய்துள்ளன. குறிப்பாக, கடந்த மாதம் […]

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அச்சம் தரும் வகையில் அதிகரித்துள்ளதாகவும், மாணவர்கள் கைகளில் புத்தகம் ஏந்த வேண்டிய வயதில் ஆயுதங்களை ஏந்தும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக தான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் […]

2026-ஆம் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், பலரும் தங்களின் முதல் இலக்காக (Resolution) உடல் எடையை குறைப்பதையே வைத்திருப்பார்கள். ஆனால், குளிர்காலச் சூழலும், அதனால் ஏற்படும் உடல் சோர்வும் இந்த இலக்கை எட்டுவதற்குப் பெரும் தடையாக அமைகின்றன. கடும் குளிரில் ஜிம்மிற்குச் சென்று வியர்க்க விறுவிறுக்கப் பயிற்சி செய்ய தயங்குபவர்களுக்கு, வாழ்க்கை முறையில் சில எளிய மாற்றங்களை செய்வதன் மூலமே எடையைக் கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் வழிகாட்டுகின்றனர். குளிர்காலத்தில் சூரிய […]

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படையை ஏவித் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துவிட்டு, சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி 150 கி.மீ தொலைவில் வீசியெறிந்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி தாமரைக்குளம் பகுதியில் வசித்து வந்த தேவா (எ) ரித்தீஷ் (27) என்ற கூலித்தொழிலாளி, கடந்த டிசம்பர் 26 முதல் மாயமானதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது தாய் அளித்த புகாரின் பேரில் […]

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே, அதன் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கிய பழைய நிர்வாகிகளுக்கும், தற்போதைய தலைமைக்கும் இடையிலான பனிப்போர் இப்போது பகிரங்கமாக வெடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் முற்றுகையிடப்பட்ட சம்பவம், தவெக-வின் உட்கட்சிப் பூசலை வீதிக்குக் கொண்டு வந்துள்ளது. வெள்ளக்கோவிலில் நகர அலுவலக திறப்பு விழாவிற்கு வந்த செங்கோட்டையனை, விஜய் மக்கள் இயக்கத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக […]

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீவிரமாகப் பயணித்து வரும் நிலையில், அவரது திரையுலகப் பயணத்தின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ வருகின்ற ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. ஒருபுறம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகளில் விஜய் மும்முரம் காட்டி வரும் வேளையில், அவர் மீதான விமர்சனங்களும் அரசியல் தளத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, தசாப்த காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் அவசியம் என திமுக தலைமை கருதினாலும், தமிழகத்தில் அக்கட்சியின் வாக்கு வங்கி மற்றும் […]

சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான கலால் (Excise) வரியில் பெரிய மாற்றத்தை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய விதி 2026 பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில், சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையைப் பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2026 பிப்ரவரி 1 முதல் […]

2024-25-ம் ஆண்டுக்கான  C, D பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டக்கூடிய வகையில், பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை. வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி, அவர்தம் ஆற்றலையும் அறிவினையும் பெருக்கிட […]

தமிழகத்தில் சமீபத்தில் அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்கி வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. கடந்த 24-ம் தேதி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசுப் பேருந்து டயர் வெடித்து இரண்டு கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். அதே போல் கடந்த நவம்பர் மாதம் சிவகங்கையில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் என அரசு பேருந்து விபத்து […]