திருமணம் முடிந்த முதலிரவு அன்று தாம்பத்திய உறவுக்கு மறுத்த புதுமணப் பெண்ணை, அவரது கணவரே சுத்தியலால் தாக்கி, ஒரு அறையில் பூட்டி வைத்துச் சித்ரவதை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, திருமண தகவல் மையம் மூலமாகப் புரசைவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்டின் ஜோஷ்வா என்ற நபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அகஸ்டின் நிதித் தொழில் (Financial business) செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், […]

சில நேரங்களில், காலையில் தூங்கி எழுந்த உடன் தொண்டை வலி அல்லது வறண்ட தொண்டை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது எப்போதாவது நடந்தால், அதிகம் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் அது அடிக்கடி நடந்தால், கவனம் செலுத்துவது அவசியம்… உங்கள் தொண்டை வறண்டிருந்தால், உங்கள் உடலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். தூக்கப் பழக்கம், அறையில் காற்றின் தரம் மற்றும் உட்புற உடல் பிரச்சினைகள் உங்கள் தொண்டை ஆரோக்கியத்தை பாதிக்கலாம். […]

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு விலை ரூ.1,120 உயர்ந்து, ரூ.95,840 செய்யப்படுகிறது.. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. […]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ தொலைவிலும் உள்ளது.. வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புயல் காரணமாக […]

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பரபரப்பை கிளப்பினார். அரசியல் அனுபவம் மிக்க செங்கோட்டையனின் வரவு, கட்சிக்குப் பலம் சேர்க்கும் என்று கருதும் விஜய், அவருக்கு உச்சபட்ச மரியாதையை அளித்து வருகிறார். மறைந்த விஜயகாந்தின் கட்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன் எப்படி முக்கிய மையமாக இருந்தாரோ, அதேபோல தனது அரசியல் நடவடிக்கைகளுக்குச் செங்கோட்டையனை மையப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை விஜய் நினைத்தால் […]

குடிபோதையில் சித்தியிடம் தவறாக நடந்துகொண்ட மகனைப் பெற்ற தந்தையும், அவரின் இரண்டாவது மனைவியின் மகனும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த ஜொல்லபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்குப் பிறந்தவர் சரவணன் (32), இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் கோவிந்தராஜ். ஜெய்சங்கர் தனது இரண்டு மனைவிகள் மற்றும் மகன்களுடன் ஒரே வீட்டில்தான் கூட்டுக் குடும்பமாக வசித்து […]

முட்டை என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சூப்பர் உணவாகும். புரதங்கள், வைட்டமின்கள் எனப் பல சத்துக்களைக் கொண்டிருக்கும் முட்டை, நமது ஆரோக்கியத்திற்குப் பல வழிகளில் நன்மை பயக்கும். இருப்பினும், முட்டை சாப்பிட்ட பிறகு அல்லது முட்டையுடன் சேர்த்துச் சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். அவ்வாறு செய்யத் தவறினால், நன்மைக்கு மாறாக, செரிமானக் கோளாறுகள் மற்றும் ஒவ்வாமை […]

துறைமுகப் பணிகளை நிறுவனங்கள் கட்டாயமாகப் பதிவு செய்தல், மற்றும் துறைமுக நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறுவது போன்றவை தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் கிடைக்க உதவுகிறது. புதிய தொழிலாளர் சட்டங்கள் மற்றும் கடல்சார் சட்டம் துறைமுகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனுக்கான மாற்றத்தக்க நன்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.துறைமுகத் தொழிலாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் கிடைக்க இது வகை செய்கிறது. பொருளாதார மேம்பாட்டிற்கு தொழிலாளர் நலன் முக்கிய உந்து […]

இந்தியாவில் இயங்கும் இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய முக்கிய விமான நிறுவனங்களின் சேவைகள், ஏர்பஸ் விமானங்களில் ஏற்பட்டுள்ள மென்பொருள் கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட உள்ளன. சூரியக் கதிர்வீச்சினால் விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளில் உள்ள தகவல் பாதிக்கப்படலாம் என்று ஏர்பஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் இயக்கப்படும் சுமார் 560 ஏ320 குடும்ப ரக விமானங்களில், 200 முதல் 250 விமானங்கள் வரை உடனடியாக மென்பொருள் […]

இந்தியாவில், வங்கிச் செயல்பாடுகள், அரசு நலத்திட்டங்களைப் பெறுவது மற்றும் அனைத்து நிதிச் சேவைகளுக்கும் ஆதார் அட்டை ஒரு தவிர்க்க முடியாத அடையாளமாக மாறியுள்ளது. இந்த முக்கியமான ஆவணத்தில் உள்ள விவரங்கள், குறிப்பாக முகவரித் தகவல், சரியாகப் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், பயனாளர்கள் பல முக்கியமான வேலைகளில் தேவையற்ற தாமதங்களையும் தடைகளையும் எதிர்கொள்ள நேரிடும். எனவே, உங்கள் ஆதார் முகவரியை எப்போதுமே சரியாக வைத்திருப்பது, KYC சரிபார்ப்புகள், சலுகைகளைக் கோருதல் அல்லது கணக்குத் […]