கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

குவைத்திலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் கடத்தல் மற்றும் வெடிகுண்டு மிரட்டல் குறித்த குறிப்பு கண்டெடுக்கப்பட்டது.. இதையடுத்து, அந்த விமானம் வெள்ளிக்கிழமை அகமதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், ஒரு பெரிய பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டது. விமானம் காலை 6.40 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு, விரிவான பாதுகாப்புச் சோதனைகளுக்கு […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை பலருக்கும் ஒரு உத்வேகம் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் ஒரு சாதாரண பேருந்து நடத்துநராகப் பணியாற்றிய அவர், அந்த வேலையை விட்டுவிட்டு தனது கனவுகளைத் துரத்தி சென்னைக்கு வந்தார். திரைப்படங்களின் மீதான ஆர்வத்தால் அவர் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்தார். தனது நிறம் மற்றும் மொழி காரணமாக பல கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.. ஆனால் அவர் அதையெல்லாம் கடந்து தனது தனித்துவமான பாணியால் ரசிகர்களின் இதயங்களை […]

மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1, 2026) அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். ஒரே பிரதமரின் பதவிக்காலத்தில் 9 முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்த ஒரே நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற்று நிர்மலா சீதாராமன் வரலாறு படைக்க உள்ளார். இந்தியாவின் முதல் பட்ஜெட் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது 1860 ஆம் […]

ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் மில்லியன் கணக்கான புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த வழக்குகளில் பல தாமதமாகவே உறுதி செய்யப்படுவதால், சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் பல உயிர்கள் இழக்கப்படுகின்றன. மேலும், சமீப காலங்களில் புற்றுநோய் பாதிப்புகள், புற்றுநோயின் வகைகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது கவலைக்குரிய விஷயமாகும். இருப்பினும், இது ஒரே இரவில் வரும் நோய் அல்ல. இது மெதுவாக வளர்ந்து, நீண்ட காலத்திற்கு முன்பே […]

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது.. தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்க்ள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.. பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு […]

2016 முதல் 2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரையிலான ஒன்பது ஆண்டுகளுக்கான சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார். அதன்படி, நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர் பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும் நடிகைகள் […]

திருமணம் என்பது பொதுவாக ஒரு கொண்டாட்டம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சங்கமம். ஆனால் உலகின் சில பகுதிகளில், திருமணச் சடங்குகள் ஆச்சரியமூட்டுவதாகவும், நம்ப முடியாததாகவும்… சில கலாச்சாரங்கள் திருமணத்தின் ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில், மற்ற சிலவற்றில், பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் விசித்திரமான பழக்கவழக்கங்கள் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன. அந்த வகையில் திருமணத்திற்குப் பிறகு மூன்று நாட்களுக்கு கழிப்பறையைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் வழக்கம் உள்ளது.. பல்வேறு நாடுகளில் […]

மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் புதன்கிழமை அன்று விமான விபத்தில் உயிரிழந்தார். அஜித் பவார் புதன்கிழமை காலை 8 மணியளவில் பாராமதிக்கு அருகிலுள்ள சில கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக மும்பையிலிருந்து விமானத்தில் புறப்பட்டார். இருப்பினும், பாராமதி விமான நிலையத்தை நெருங்கியபோது, ​​அவரது விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும், அவருடன் விமானத்தில் பயணித்த அவரது மெய்க்காப்பாளர் விதீப் […]

மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படும் நேரம் நெருங்குகிறது. பட்ஜெட்டில் சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் பல முடிவுகளை மத்திய அரசு எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் முடிவுகளும் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும். ரயில் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மத்திய அரசு மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கோவிட் பெருந்தொற்று காரணமாக, 2020 மார்ச் மாதம் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே நிறுத்தியது. இந்தச் […]