2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (SIR) கைவிடக் கோரி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நேற்று முன்தினம் (நவம்பர் 16) சென்னையில் போராட்டம் நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி, சுவாமி சிவானந்தா சாலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பிரிவுப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உட்பட பல முக்கிய […]

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், வைலாமுர் கிராமத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான இரண்டரை மாதத்தில், புதுமணப்பெண் தனக்கு வயிற்று வலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து, கணவர் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்தப் பெண் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் […]

ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு சமூக நீதி மாணவர் விடுதியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் சக மூத்த மாணவர்களால் ஜாதி ரீதியிலும், மனரீதியிலும், உடல்ரீதியிலும் கடும் சித்திரவதைக்கும் பாலியல் தொல்லைக்கும் ஆளாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த முனியப்பனின் மகன் ஹரி பிரசாந்த் (13) என்ற அந்த சிறுவன், விடுதியில் தங்கிய நாள் முதல் இந்தப் பயங்கர கொடுமைகளை சந்தித்து வந்துள்ளான். விடுதியின் […]

சவுதி அரேபியாவில் நடந்த துயரமான பேருந்து விபத்து, உலகளவில் ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் மெக்காவிற்கு பயணம் செய்கிறார்கள், சிலர் தங்கள் மதக் கடமைகளை நிறைவேற்றவும், மற்றவர்கள் ஆன்மீக ஆறுதலைக் காணவும். முஸ்லிம் சமூகம் இந்த புனித யாத்திரைகளைப் பற்றி அனைத்தையும் அறிந்திருக்கலாம், ஆனால் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஹஜ் மற்றும் உம்ராவிற்கு என்ன […]

உலகளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரத்த சர்க்கரை அளவை இயற்கையாகக் கட்டுக்குள் வைக்க உதவும் ஒரு எளிய ரகசியத்தை அறிவியல் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. நாம் சாதாரணமாகப் பார்க்கும் மா இலைகள், டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் தன்மை கொண்டவை என்று, PubMed Central மற்றும் அமெரிக்காவின் தேசிய பயோடெக்னாலஜி ஆய்வகம் உள்ளிட்ட அறிவியல் இதழ்களின் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. […]