உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திசோத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகன் சவுரப் (30). சவுரப்புக்குத் திருமணம் ஆன நிலையில், தந்தை சுபாஷ், தனது மருமகள் உடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த முறையற்ற உறவு குறித்து மகன் சவுரப்புக்கு தெரியவந்தபோது, அவர் தந்தை சுபாஷுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தக் குடும்பப் பிரச்சனை தொடர்ந்து வந்த நிலையில், […]

கல்லீரல் செல்களில் கொழுப்பு சேரும்போது கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. இந்த ஆபத்து பொதுவாக அதிகமாக மது அருந்துபவர்களுக்கு அதிகமாக இருக்கும். இருப்பினும், மது அருந்தாத இளைஞர்களிடையே சமீப காலமாக மது அருந்தாத கொழுப்பு கல்லீரல் நோய் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் உணவுமுறை, மன அழுத்தம், உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள். இதை லேசாக எடுத்துக்கொள்வது நிலைமையை ஆபத்தானதாக மாற்றும். பொதுவாக, உங்களுக்கு கொழுப்பு […]

செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை மேலும் தீவிரமாகியுள்ளது. இன்று அதிகாலை 5:15 மணிக்கு, அமலாக்கத்துறை Enforcement Directorate (ED) அதிகாரிகள் டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள Al-Falah குழுமத்துடன் தொடர்புடைய 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தினர். இந்த சோதனைகள், ‘ஷெல்’ நிறுவனங்கள், தங்குமிட உதவிகள் மற்றும் சந்தேகமான பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக நடைபெறும் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாகும். அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் டெல்லி அலுவலகத்திலும் […]

பொதுவாக, கொட்டாவி வருவது சோர்வின் அல்லது தூக்கத்தின் அறிகுறியாகவே நம்மில் பலரால் கருதப்படுகிறது. ஆனால், சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சிகள், எந்தவொரு தெளிவான காரணமும் இல்லாமல் அடிக்கடி கொட்டாவி விடுவது என்பது, உடலில் உள்ள சில முக்கிய நரம்பியல் அல்லது வளர்சிதை மாற்றக் கோளாறுகளை சுட்டிக்காட்டலாம் என்று எச்சரிக்கின்றன. இந்தக் காரணங்களைக் கருத்தில் கொள்ளாமல் புறக்கணிப்பது, சில நேரங்களில் ஆபத்தான உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். உதாரணமாக, ‘மைக்ரோநியூரோகிராபி’ ஆய்வு மூலம், நாம் […]

சவுதி அரேபியாவில் உம்ரா யாத்திரைக்குச் சென்ற இந்திய பக்தர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று காலை, மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் செய்த பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு டீசல் டாங்கருடன் மோதியதில், குறைந்தது 45 பேர் உயிரிழந்தனர்.. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாதைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிகாலை 1.30 மணியளவில், மதீனாவிற்கு 160 கிமீ தொலைவில் […]

வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக கிராமப்புற இளைஞர்களின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன், தமிழக அரசு 2025-2026 ஆம் ஆண்டுக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘முதல்வரின் உழவர் நல சேவை மைய திட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், வேளாண் துறை சார்ந்த தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டம் முழுவதும் இந்தப் புதிய திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. […]

இன்று காலை கொல்வெஸி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ரன் வேயில் இருந்து சறுக்கிய ஒரு பட்டய விமானம் தீப்பற்றி எரிந்த சம்பவம் காங்கோவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காங்கோ ஜனநாயக குடியரசின் சுரங்கத்துறை அமைச்சர் லூயிஸ் வட்டும் கபாம்பா மற்றும் அவரது குழுவினர் அந்த விமானத்தில் இருந்தனர்.. விமானத்தின் பின்புறம் முழுவதும் சில விநாடிகளிலேயே தீ பரவத்தொடங்கியது.. எனினும் அனைத்து பயணிகளும் தீப்பரவுவதற்கு முன்பே உடனே வெளியேறி உயிர் […]