வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி வணிக அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் முன்னணி வங்கிகளுடன் இணைந்து, டிஜிட்டல் ஒப்புதல் முறைமை ஒன்றை நடைமுறையில் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ஒப்புதல்கள் இனி ஆஃப்லைனில் இல்லாமல், சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் பதிவாக இருக்கும். இதன் மூலம், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், தங்களது […]

பில்லியன் கணக்கான பயனர்களைப் கொண்ட வாட்ஸ்அப்பில், வரும் காலங்களில் விளம்பரங்கள் தோன்றவுள்ளன என்று மெட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் தனிப்பட்ட அரட்டைகள், அழைப்புகள், குழு உரைகள் ஆகியவை விளம்பரமில்லாமல் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. பயனரின் அனுபவத்தை பாதிக்காமல், தளத்தை வருவாயின் மூலமாக மாற்றும் நோக்கத்தில் மெட்டா இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரைகள், அழைப்புகள், ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் குறியாக்கம் செய்யப்பட்டவை என்றும், அவை விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படமாட்டாது […]

தமிழக ADGP ஹெச்.எம். ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் அருகே நடந்த காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தமிழகத்தின் உயர் காவல்துறை அதிகாரியான ADGP ஹெச்.எம். ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை, அரசு உள்துறை செயலாளர் இன்று வெளியிட்டார். […]

ஈரானை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏபிசி நியூஸுக்கு அளித்த நேர்காணலில், “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்வது தான் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரே வழி” என்று நெதன்யாகு கூறினார். ஈரானை தொடர்ந்து இலக்காகக் […]

அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. இன்று ஜூன் 17 செவ்வாய்க்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவசரமாக கொல்கத்தாவில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பிரச்சனையின் தன்மை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அனைத்து ஏர் இந்தியா பயணிகளும் கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர், மேலும் யாருக்கும் […]

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 குறைந்து ரூ. 73,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது. ரஷ்யா – […]

நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைய தொழில்நுட்ப வாழ்க்கையில் கணினி முன் பல மணி நேரம் செலவழிப்பது வழக்கமான விஷயமாகிவிட்டது. குறிப்பாக ஐ.டி. துறையில் பணியாற்றும் பெரும்பாலானோர், தினமும் 10 மணி நேரத்துக்கும் மேல் ஒரு இடத்தில் அமர்ந்தே வேலை செய்யும் சூழ்நிலையில் இருக்கின்றனர். ஆனால், இந்த உட்காரும் பழக்கம் மிக ஆபத்தானதென்றும், அது புற்றுநோயை உருவாக்கும் […]