சென்னை பட்டினம்பாக்கத்தில் முதல்வர் விஜய்யின் இல்லத்திற்கு அருகாமையிலேயே புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பாரம்பரியமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்திருந்த முதலமைச்சரின் அலுவலக அறை, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு அண்மையில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இயற்கையாகவே கருவுறுதலை அதிகரிக்கும்” என்று கூறப்படும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்த அறிவுரைகளுக்கு சமூக வலைத்தளங்களில் பஞ்சமே இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பது நிதர்சனமான உண்மை என்றாலும், இதுபோன்ற தவறான தகவல்களால் நோயாளிகள் மருத்துவ நிபுணர்களிடம் முறையான சிகிச்சை பெறாமல் ஏமாந்து போகும் சம்பவங்கள் பல நடந்துள்ளன. இந்தியா ஐவிஎஃப் ஃபெர்டிலிட்டி அமைப்பின் இணை நிறுவனரும், மருத்துவ இயக்குநருமான […]
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் கூறி வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி தொடர்ந்து ‘தனது நிலைபாடுகளை மாற்றிக்கொண்டே இருப்பதாகவும்’, நாடாளுமன்றத்தை முடக்குவதே அவரது நோக்கம் என்றும் நட்டா கடுமையாக விமர்சித்தார். ஆரம்பத்தில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் […]
கொலம்பியா நிலநடுக்கம்: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டின் மேற்கு பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி சோகோ (Chocó) பிராந்தியத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல்வேறு நகரங்களில் உணரப்பட்டதுடன், வெனிசுலா உள்ளிட்ட அண்டை பகுதிகளிலும் அதிர்வுகள் […]
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் சிலர், சாரங்பூர் அருகே உள்ள கட்னாவாட் கிராமத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்காக வேனில் புறப்பட்டுள்ளனர். இன்று காலையில் இந்த வேன் படானா பைபாஸ் பகுதிக்கு அருகே வந்தபோது, அப்பகுதியில் பெய்த கனமழையால் சீறிப்பாய்ந்து வந்த ஜிரி ஓடையின் நீர், சாலையை முழுமையாக மூழ்கடித்து வழிந்தோடிக் கொண்டிருந்தது. அப்போது, வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் வாகனத்தை இயக்க வேண்டாம் என அப்பகுதி மக்கள் […]
சட்டசபையில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் விமர்சனங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்தார். சட்டசபையில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “திமுக ஆட்சியில் ‘ஆக்ஷன்’ மட்டுமே இருந்தது; ‘ஆக்டிங்’ இல்லை. தவெக ஆட்சியில் எதையும் ரீல்ஸ் கண்டெண்ட் போலப் பேசி வருகிறீர்கள்” என விமர்சித்தார். இதற்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர் ரமேஷ், “இந்தத் தொழில்நுட்பத்தை 10 நிமிடங்களுக்கு முன்புதான் அண்ணன் எம்.ஆர்.கே. […]
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை மாற்றி அமைப்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகக் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தற்போது நிலவும் நடைமுறைப்படி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் […]
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்டின் (AGS Entertainment) தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஆண்டிற்கு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருவாய் கொண்ட திருக்கோவில்களுக்குப் பரம்பரை முறைசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தகுதியான நபர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில் மாநில […]
பெற்றோர் வயதாகும்போது அவர்களுக்கு துணையாக இருப்பது பிள்ளைகள்தான் என்ற எதிர்பார்ப்பு பல குடும்பங்களிலும் இருக்கும். ஆனால், வாழ்க்கையின் வேகத்தில் சில நேரங்களில் வயதான பெற்றோருடன் பிள்ளைகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதை மறந்துவிடுகிறார்கள். பிள்ளைகளின் வருகைக்காகவும் ஒரு வார்த்தைக்காகவும் காத்திருக்கும் பெற்றோரின் தனிமை கவனிக்கப்படாமல் போகும்போது, அது எவ்வளவு வேதனையான நிலைக்கு வழிவகுக்கும் என்பதற்கு பெங்களூருவில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சி உதாரணமாகியுள்ளது. பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் எல்லைக்குட்பட்ட ஹவனூர் லே-அவுட்டில் […]
“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்” என்பார்கள்… ஆனால், ஒரு முக்கிய உண்மையை மறைத்து நடந்த திருமணம் 25 நாட்களிலேயே பிரச்சினையாக மாறிய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடிந்து சில வாரங்களிலேயே மனைவி குறித்து தான் எதிர்பாராத தகவலை அறிந்ததாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையை அணுகியுள்ளார். திருமணத்திற்கு முன்பு முக்கியமான தகவல் தன்னிடம் மறைக்கப்பட்டதாகவும், இதனால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் […]

