வயதுக்கு மீறிய உள்ளடக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க ஓடிடி தளங்களில் வலுவான பாதுகாப்பு அம்சங்களை கட்டாயப்படுத்துகிறது மத்திய அரசு. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் கீழ், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-ன் பகுதி-III, ஓடிடி தளங்களில் உள்ளடக்கத்தை வெளியிடுபவர்களுக்கான நெறிமுறை குறியீடுகளை வழங்குகிறது. இதன்படி, சட்டத்தால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு உள்ளடக்கமும் வெளியிடப்படக் கூடாது. மேலும் வயது அடிப்படையிலான உள்ளடக்கம் 5 வகைகளாகப் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவு வகைகள் வழங்கப்படும். இது படிப்படியாக அனைத்து ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (13.12.2025) டெல்லி ரயில் பவனில் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ரயில்வே துறை இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவும் கலந்து கொண்டார்.வந்தே பாரத் ரயில்களில் அந்தந்தப் பகுதியின் உள்ளூர் உணவு வகைகளை வழங்க […]
போலியான வரி விலக்குகள் கோருவோர் மீது நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை எடுக்கிறது. வருமான விவரங்களை சரிசெய்ய “நட்ஜ்” இயக்கம் தொடக்கம். வரி விலக்குகள் பெற போலியான தகவல்களுடன் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வதில் ஈடுபட்ட பல இடைத்தரகர்கள் மீது வருமான வரிச் சட்டத்தின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) நடவடிக்கை எடுத்துள்ளது. பலர் தவறான தகவல்களுடன் வருமான விவரங்களை தாக்கல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட […]
தமிழகத்தில் இன்று மற்றும், நாளை 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் […]
பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டத்துக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதுகுறித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் […]
வயது சான்றிதழ் இல்லாத பணியாளர்கள் மருத்துவ வாரியத்திடம் இருந்து வயது சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின்வாரியத்தில் தற்போது பணியில் இருப்பவர்களில் சிலர் முறையான வயது சான்றிதழ் சமர்ப்பிக்காமல் பணியில் சேர்ந்துள்ளதாகவும், அந்த பணியாளர்கள் மருத்துவ வாரியத்திடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவில்; அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் அரசு […]
மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து முறையான விசாரணை நடைபெறாததைக் கண்டித்தும் டிச.17 மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு புதிய திட்டங்களும் ஸ்டிக்கர் ஒட்டி […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், கணக்கீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. […]
ரத்தத்தில் A, B, AB மற்றும் O போன்ற வெவ்வேறு வகைகள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.. இவை நமது சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் காணப்படும் வெவ்வேறு ரசாயனக் குறிப்பான்களைக் குறிக்கின்றன. பாதுகாப்பான ரத்தமாற்றம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் போன்ற சூழ்நிலைகளில் ரத்தப் பிரிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த ரத்தப் பிரிவின் மூலம் மற்றொரு நோயை கண்டறியலாம் என்பது ஒரு புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. […]
வாஸ்து சாஸ்திரத்தில் பிரதான வாயிலுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதுதான் உங்கள் வீட்டிற்குள் ஆற்றலைக் கொண்டு வரும் வழித்தடம். அதனால்தான் அது எப்போதும் சரியான திசையில் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் பிரதான வாசல் கிழக்கு திசையில் திறந்தால், அது உங்கள் வீட்டிற்கு செல்வத்தை ஈர்க்கும். உங்கள் வீட்டின் கதவுகள் மேற்கு அல்லது தெற்கு திசையை நோக்கி இருந்தால், நீங்கள் நிச்சயமாக வாஸ்துவைக் கருத்தில் கொள்ள […]

