தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் தாக்கம் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே திருப்பத்தூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 11 […]

மத்திய பிலிப்பைன்ஸில் கால்மேகி புயல் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக கால்மேகி என்று புயல் தாக்கியது. சூறாவளியால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பிலிப்பைன்ஸின் பல பகுதிகளில் சாலை, மின்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்குள்ள பாலவான் தீவு அருகே கல்மேகி புயல் மணிக்கு […]

தென்னிந்தியர்களின் பிரதான உணவாக வெள்ளை அரிசி சாதம் இருந்தாலும், அரிசியை 3 வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்று உணவு மற்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெள்ளை அரிசியை அதிக அளவில் உட்கொள்வதால் உடலில் ஏற்படக்கூடிய முக்கியப் பிரச்சனைகள் குறித்து இங்குப் பார்க்கலாம். உடல் பருமன் மற்றும் பசி உணர்வு அதிகரிப்பு : வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் சத்து மிக அதிகமாக உள்ளது. இதை தினசரி 3 வேளையும் […]

மத்திய அரசின் அஞ்சல் துறையின், அஞ்சலக ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ளவர்களுக்கு நேர்காணல் சென்னையில் உள்ள பொது அஞ்சலகத்தில் நவம்பர் 17-ம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அஞ்சலக முகவர்களாக சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய வயது, கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்கள் (அசல் மற்றும் சுய சான்றொப்பமிட்ட நகல்), ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் […]

ATMகள் இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் காணப்படுகின்றன, இதனால் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க நீண்ட வங்கி வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவை நீங்குகிறது. பொதுவாக, ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ஏடிஎம் கார்டு தேவைப்படும். ஆனால் இப்போது வாடிக்கையாளர்கள் உங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும் – ஏடிஎம் கார்டு தேவையில்லை. வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க டெபிட் அல்லது ஏடிஎம் […]

டெல்லியில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டின்போது மூன்று தலைசிறந்த புதிய கண்டுபிடிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு பரிசாக வழங்கி உள்ளார். இந்தியாவிற்கு சொந்தமான குவாண்டம் பாதுகாப்பு சிப் (QSIP), கணக்கீட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தும் இந்தியாவின் முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் (25-qubit QPU) மற்றும் இந்தியாவின் முதல் உள்நாட்டு புற்றுநோய் செல் சிகிச்சை (CAR-T செல் சிகிச்சை) ஆகிய மூன்று […]

கோவையில் 3 வாலிபர்களால் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 20 வயது கல்லூரி மாணவி வழக்கில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் தேதி இரவு, கோவை சித்ரா சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில், மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி, கோவையைச் சேர்ந்த தனது காதலனுடன் காரில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த 3 வாலிபர்கள், மாணவியின் […]

ஹமாஸுக்கு எதிராகப் போராட காசாவிற்கு 20,000 வீரர்களை அனுப்புவதாக பாகிஸ்தான் அமெரிக்காவிடம் உறுதியளித்ததாகக் கூறும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, பாகிஸ்தான் தனது படைகளை அனுப்புவதற்கு ஈடாக ஒரு வீரருக்கு $10,000 கேட்டுள்ளது, அதே நேரத்தில் இஸ்ரேல் ஒரு வீரருக்கு $100 மட்டுமே வழங்க முன்வந்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் எகிப்தில் மொசாட் மற்றும் சிஐஏவைச் சந்தித்தார். இதேபோல், சமீபத்தில், பாகிஸ்தான் ராணுவத்தின் […]

இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய புதிய பாடத்திட்ட வடிவமைப்புக்கான உயர்மட்ட மற்றும் வல்லுநர் குழுக்களை பள்ளிக் கல்வித் துறை நியமனம் செய்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்; மாநிலக் கல்விக் கொள்கை-2025 அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றியமைப்பட உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க பாட நிபுணர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட வடிவமைப்பு […]