கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால், மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர். புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்றனர். அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக ஆசிரியர்கள் இனிப்பு வழங்கினர். பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதேபோல் பள்ளி வேலை நாட்கள், விடுமுறைகள், […]

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த 10 நாட்களாகத் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமலேயே இருந்து வந்தது. இரண்டு நாட்கள் உயர்ந்தால் இரண்டு நாட்கள் சரிவது எனத் தங்கம் விலை […]

18வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. ஈ சாலா கப் நம்தே என தொடர்ந்து முழங்கி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் பெங்களூரு அணி ஏற்கனவே 3 முறையும், பஞ்சாப் அணி ஒரு முறையும் இறுதிப் போட்டிகளில் விளையாடிய நிலையில், கோப்பை கனவு, கனவாகவே நீடித்து வந்தது. நடப்புத் தொடரில், முதல் இரு […]

அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த லெவல் அப் என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன், கல்வி திறன் ஆகியவற்றை மேம்படுத்தி, அகில இந்திய அளவில் அனைத்து வாய்ப்புகளும் மாணவர்களுக்கு கிடைக்கும் நிலையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக புதுப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், திறன்கள் திட்டம் உள்ளிட்டவை மாணவர்களிடையே […]

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதில் குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்ததம் ரத்து அமைந்து இருந்தது. பாகிஸ்தானின் 80 சதவீத விவசாயம் சிந்து நதி நீரை நம்பியிருப்பதால், இந்தியா அந்த நீரை நிறுத்த எடுத்து இருக்கும் முடிவு பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் சீனா இப்போது சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. பீஜிங்கில் உள்ள சீனா மற்றும் உலகமயமாக்கல் […]

சைக்கிளை எல்லோரும் நிச்சயமாக பயன்படுத்தியிருப்போம். ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கிய சாதனமாக சைக்கிள் விளங்கியது. ஆனால் இன்று இதை பெரும்பாலும் உடற்பயிற்சிக்காக மட்டும் பயன்படுத்தும் நிலை வந்துள்ளது. அதாவது, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் குறைந்து ஒரு சைக்கிள் ஆவது இருக்கும். காலப்போக்கில் இரண்டு சக்கர மேட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லச் செல்ல வீட்டுக்கு இரண்டு மேட்டார் வாகனங்கள் என்ற நிலை […]

கடந்த சில நாட்களாக ஸ்மார்ட்போன் பயனர்கள் இன்ஸ்டாகிராமால் பேட்டரி சீக்கிரம் காலியாவதாக குற்றசாட்டை முன் வைத்துள்ளனர். இதன் பின்னணியில் செயலில் இல்லாதபோதும் இன்ஸ்டா பேட்டரியை பயன்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது. பயனர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்த நிலையில், கூகுள் நிறுவனம் இன்ஸ்டாகிராம் பேட்டரி சிக்கலை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. உடனடியாக, இந்த பிரச்சனையை சரிசெய்யும் விதமாக, இன்ஸ்டாகிராம் செயலிக்கான ஒரு புதிய அப்டேட்டை மே 28, அன்று வெளியிட்டது. பேட்டரி சீக்கிரம் […]

மணிப்பூர் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. தற்போதைக்கு தனக்கு 44 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை சந்தித்து பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷாம் சிங் கூறியுள்ளார். இந்த சூழலில் தான், மணிப்பூரில் மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. அதாவது, பாரதிய ஜனதா கட்சியின் பெண் தலைவரின் மகனின் 130 ஆபாச வீடியோக்கள் தொடர்பான […]

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி 33 நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்காக சென்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளின் குழு அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளனர். கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் […]

நடப்பாண்டில் கோவிட்-19 மீண்டும் பரவுவது கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டில் இன்னும் கொடிய அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஜப்பானிய பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக, அரசாங்கம் பொதுமக்களிடம் தங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுமாறும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா முதன்முதலில் 2019 ஆம் […]