நாட்டில் ஒவ்வொரு நாளும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தும் நிலையில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் சுலபமாகவும் எளிதாகவும் இருப்பதால் அதனை பலரும் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு யுபிஐ பண பரிவர்த்தனைகள் மதிப்பு அதிகரித்துள்ளதாக சமீபத்தில் அறிக்கை வெளியானது. இதன் காரணமாக யுபிஐ செயலியை மேம்படுத்துவதற்காக பல்வேறு விதமான புதிய அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. கூகுள் பே […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகம் முழுவதும் இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் இயக்கத்தில் இணையுமாறு ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்; விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துகள். கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உயர்த்தியுள்ளோம். இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ், துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் […]
மத்திய அரசின் கலாச்சார விழிப்புணர்வு தொடர்பான புத்தாக்கப் பயிற்சிகளுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்து அனுப்ப வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (சிசிஆர்டி) ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த பயிற்சி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், கலைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்கள் […]
நவீன வாழ்க்கை முறையில், வைஃபை நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, எல்லா இடங்களிலும் வைஃபை இருப்பது மிகவும் முக்கியம். இந்தநிலையில், மலட்டுத்தன்மை அதிகரிக்க வைஃபையும் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Wi-Fiக்கும் குழந்தையின்மைக்கும் என்ன தொடர்பு? ரவுட்டர்கள், மடிக்கணினிகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் போன்ற வைஃபை சாதனங்கள் 2.45 GHz அதிர்வெண்ணில் RF-EMR ஐ வெளியிடுகின்றன. இவை அயனியாக்கம் […]
திருவண்ணமாலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது போல் ஆஞ்சநேயரே ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் செல்லும் கோயில் ஒன்று இருக்கிறது என என்றால் கண்டிப்பாக ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. உண்மை தான். அப்படி ஒரு கோவில் சென்னையில் உள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது புதுப்பாக்கம். இங்கு அழகிய கஜகிரி என்ற மலை மீது அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் கோவில். 108 படிகள் ஏறிச் சென்றால் மலை மீது […]
இந்திய தூதரகம் எச்சரிக்கையாக இருக்கவும், தூதரகத்தின் சமூக ஊடக கணக்குகளை கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தலில் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக பல இந்திய குடிமக்கள் ஈரானில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கிடையில், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) இந்திய மக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் […]
அமெரிக்க ராணுவத்தின் 250வது ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனீர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ஆங்கில நாளிதழான தி இந்துவில் வெளியான செய்தியின்படி, அந்தச் செய்தி தவறானது என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தினார். “250வது நிறுவன தின ராணுவ அணிவகுப்புக்கு எந்த வெளிநாட்டு ராணுவத் தலைவரும் அழைக்கப்படவில்லை” என்று அவர் கூறினார். ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் விழாவில் […]
ரயில்வேயின் இணைய சேவை வழங்கும் நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள்: உதவி மேனேஜர் – 30டெபியூட்டி மேனேஜர் – 18 வயது வரம்பு: உதவி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம். டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 30 வரை இருக்கலாம். இப்பதவிகளுக்கான வயது […]
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கோவிட்-19 காரணமாக 10 இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7,383 ஆகக் குறைந்துள்ளது. ஒரு நாள் முன்பு இந்த எண்ணிக்கை 7,400 ஆக இருந்தது. இந்த காலகட்டத்தில், 17 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கோவிட் நோயால் இறந்த 10 பேரில் 3 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள், […]
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் விபத்து உள்ளூர் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குண்டமாலா கிராமத்துக்கு அருகே உள்ள இந்திரயானி ஆற்றின் மீது அமைந்திருந்த பழைய இரும்புப் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்திரயானி ஆறு என்பது மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தளம்.. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கூடியது. திடீரென இரும்பு பாலம் இடிந்து விழுந்ததில் […]