இந்தோனேசியாவில் 271 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயங்கரக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாயமான 41 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான சுராபாயாவில் (Surabaya) இருந்து தெற்கு சுலாவெசியில் அமைந்துள்ள மக்காசார் (Makassar) நகரை நோக்கி பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இக்கப்பலில் பணியாளர்கள் மற்றும் பயணிகள் உட்பட […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தமிழகப் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். விழாவின் ஒரு கட்டமாக, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையேயான கயிறு இழுக்கும் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், முன்னாள் மாணவர்கள் அணியின் சார்பில் களமிறங்கிய அமைச்சர் […]
பொள்ளாச்சி – உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை குறுபம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் (45), அவரது மனைவி பூரணி என்ற உமாமகேஸ்வரி (39), மகள்கள் நர்மதா (20), ஆர்த்தி (19) மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமன் (35) ஆகியோர் காரில் […]
அன்றாட அவசரமான வாழ்க்கை சூழலில் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தை கண்டுகொள்வதே இல்லை. குறிப்பாக, வேலைப் பளு காரணமாகச் சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்கும் பழக்கம் பலரிடமும் காணப்படுகிறது. ஆனால், இந்த அலட்சியப் போக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என வனபர்த்தி அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் எச்சரித்துள்ளார். பொதுவாக, கழிவுகள் நிரம்பும்போது சிறுநீர்ப்பை விரிவடைந்து, சிறுநீர் கழித்தவுடன் மீண்டும் தனது இயல்பு நிலைக்குத் […]
தமிழர்களின் பாரம்பரிய உணவுமுறையில் முக்கிய இடம் பிடித்துள்ள கருவாடு, உடலுக்கு பல்வேறு நன்மைகளை தந்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது ஆபத்தானது என அரசு பதிவு பெற்ற இயற்கை மற்றும் யோகா மருத்துவப் பொதுநல மருத்துவர் ராகுல் எச்சரித்துள்ளார். கருவாட்டின் மருத்துவக் குணங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து பேசிய அவர், கருவாட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, கால்சியம் மற்றும் புரதச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன என்றார். […]
அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தன் மீது தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கும் வகையில் அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு உட்கட்டமைப்புகளை தகர்ப்பதற்கான இலக்குகளை ஈரான் விரிவாக தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தன. போர் தீவிரமடைந்த நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு மிக முக்கியமான வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை […]
ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமான வாராந்திர விடுமுறைகள் மற்றும் மாநில அளவிலான பண்டிகை நாட்களைச் சேர்த்து அதிகபட்சமாக 14 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனால் நேரடி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் தங்களது பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு வழக்கமாக மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளுடனும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளுடனும் சேர்த்து மாதம் 6 […]
ஆடி மாதத்தின் 18ஆம் நாளை தமிழகம் முழுவதும் ‘ஆடிப்பெருக்கு’ திருவிழாவாக மக்கள் மிகவும் உற்சாகத்துடனும் வழிபாட்டுடனும் கொண்டாடி வருகின்றனர். விவசாயத்தை பிரதானமாக கொண்ட தமிழகத்தில், வாழ்வாதாரமளிக்கும் நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் ஒரு நன்னாளாகவே இந்நாள் ஆண்டாண்டு காலமாகப் போற்றப்படுகிறது. பழங்காலத்தில் ஆடிப் பெருக்கின்போது ஆறு மற்றும் குளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை ஒட்டி, அனைத்து நீர்நிலைகளையும் காவிரி தாயாக பாவித்து ஆற்றங்கரைகளில் மக்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்துவது வழக்கமாக உள்ளது. […]
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தமிழக மக்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்க பாஜக மேற்கொள்ளும் சதித் திட்டம் என்றும், அதனை ஆதரிப்பவர்கள் 21-ஆம் நூற்றாண்டின் எட்டப்பர்கள் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றிய பின்னர், கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை […]
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மாயமான 15 வயது சிறுமியை மீட்ட காவல்துறையினர், அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் 3 பேரை கைது செய்தனர். பெற்றோரை இழந்த நிலையில் தனது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்த அந்த சிறுமி, கடந்த ஜூலை 19-ஆம் தேதி திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எடையூர் காவல் […]

