டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங் 400 பிரதிநிதிகள் அடங்கிய மாபெரும் குழுவுடன் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணமாக இது அமையும் என்பதால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நிலவும் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண முறைமை (Unified Payments Interface – UPI) அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயணத்தில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். மேலும், யுபிஐ அமைப்பின் அளப்பரிய வளர்ச்சியையும், அது நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைந்திருப்பதையும் கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் […]
தற்போது பல நகரங்களில் சர்க்கரையின் விலை கிலோ ரூ.65 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு தரவுகளின்படி, கடந்த ஓராண்டில் சர்க்கரை விலை 20 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், அன்றாட சமையலுக்கான செலவு மட்டுமின்றி, சர்க்கரை உட்கொள்ளும் அளவு குறித்தும் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தினசரி உணவில் எவ்வளவு சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொதுவாக சர்க்கரை மற்றும் […]
குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் முதலில் செய்யும் முக்கியமான விஷயங்களில் ஒன்று பிறந்த நேரத்தைத் துல்லியமாக பதிவு செய்வது. காரணம், இந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜாதகம் கணிப்பது பல குடும்பங்களில் நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழக்கமாக உள்ளது. ஆனால், ஜாதகத்தை எப்போது எழுத வேண்டும், எப்போது பலன் பார்க்க வேண்டும் என்பதில் குடும்பத்துக்கு குடும்பம் வெவ்வேறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன. ஜோதிட நம்பிக்கைகளின்படி, குழந்தை பிறக்கும் நேரத்தில் கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலையை […]
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,03,265 அமெரிக்க டாலர்களாக உயர்த்த டிரம்ப் அரசு பரிந்துரைத்துள்ளது. இந்தப் புதிய திட்டம், அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்துவதற்கான செலவை கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக, ஹெச்-1பி விசாவை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்களுக்கே இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு தொடர்பான வரைவுத் திட்டம், திங்களன்று அமெரிக்காவின் ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய கட்டணம், விசா […]
கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடைபெற்ற அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலின் போது ஈரானிய உச்சத் தலைவர் அலி காமெனியையும், அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் இஸ்ரேல் கொன்றது. அதன்பிறகு, ஒரு வாரம் கழித்து காமெனியின் ஆறு குழந்தைகளில் ஒருவரான மொஜ்தாபா புதிய உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார். அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அவரது செய்தியில், மொஜ்தாபா காமெனி தனது தந்தை மட்டுமின்றி, தனது மனைவி, சகோதரி, சகோதரியின் குழந்தை மற்றும் […]
சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம், அமைச்சர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி வரை, 25,585 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். 12 பேர் உயிரிழந்தனர். ஆனால், நடப்பாண்டில் ஆக., […]
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் மரத்தடி முதல் மாபெரும் ஆலயங்கள் வரை எங்கும் வீற்றிருந்தாலும், தனித்துவமான வரலாற்றுச் சிறப்பும் அபூர்வ ஆற்றலும் கொண்ட சில குறிப்பிட்ட தலங்கள் மனித வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆன்மிகத்தில் நம்பப்படுகிறது. அந்த வகையில், பாறையில் வடிக்கப்பட்ட 6 அடி உயர வலம்புரி விநாயகராகவும் கையில் சிவலிங்கம் ஏந்திய திருக்கோலத்திலும் அருள்பாலிக்கும் புகழ்பெற்ற 1,600 ஆண்டுகள் பழமையான சிவகங்கை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம், […]
முன்னோர்கள் காலம் தொட்டே பின்பற்றி வந்த கோலமிடுதல், காகத்திற்கு உணவிடுதல், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தல் மற்றும் திருஷ்டி கழித்தல் போன்ற பல பாரம்பரிய பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் மூடநம்பிக்கைகளாகக் கருதிப் புறந்தள்ளி வருகின்றனர். அந்த வகையில், வீட்டின் முன் காகம் உட்கார்ந்து கரைந்தால் வீட்டிற்கு விருந்தினரோ அல்லது உறவினர்களோ வரப்போகிறார்கள் என்ற காலம்காலமாக நிலவி வரும் நம்பிக்கையும் மூடநம்பிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நம்பிக்கைக்குப் பின்னால் பண்டைய தமிழர்களின் […]

