பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த சில நாட்களாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற நிலையில், அவரது மருத்துவ நிலை இன்று மோசமானது.. இதனால் தற்போது அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டுள்ளார். 89 வயதாகும் தர்மேந்திரா மிக நெருங்கிய மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தர்மேந்திராவின் நிலை இன்று மிகவும் மோசமாக மாறியது, அதனால் மருத்துவர்கள் அவரை முற்றிலும் கண்காணிப்பில் வைக்க முடிவு […]

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கள்ளக்காதலை தொடர எதிர்ப்பு தெரிவித்த கணவனை கொடூரமாக கொலை செய்ய, உயிர் நண்பனே கூலிப்படையாக செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான கிருஷ்ணதாஸ் (36), தனது மனைவி பவித்ராவுடன் வசித்து வந்தார். குழந்தை இல்லாத மன அழுத்தத்தில் இருந்த பவித்ரா, திருவிடைக்கோடு பகுதியில் மெக்கானிக் ஷாப் நடத்தும் கணவரின் நண்பரான ரமேஷுடன் தகாத உறவு வைத்திருந்தார். இந்த […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குள்ளணூர் பகுதியில் பியூட்டி பார்லர் உரிமையாளர் ஒருவரை, அவருடன் கள்ளக்காதல் உறவில் இருந்த கார் ஓட்டுநர் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டியதால், அப்பெண் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குள்ளணூர் பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா (48). இவர் அப்பகுதியில் ‘லட்சுமி ஹைடெக்’ என்ற பெயரில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, கணவர் […]

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவற்றை இணைக்கும் தீவிரவாத வலையமைப்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில் 2 மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இந்த நிலையில் இந்த தீவிரவாத நெட்வொர்க்கில் சந்தேகமான தொடர்புக்காக லக்னோவை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார். இன்று தவுஜ் கிராமத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் 360 கிலோ வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட […]

நடிகர் மோகன்லால் நடித்த பிரபலமான ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் பாணியை பின்பற்றி, தனது மனைவியை கொடூரமாக கொலை செய்து, சாட்சியங்களை அழித்து, காணாமல் போனதாக நாடகமாடிய கணவனை புனே காவல்துறை கைது செய்துள்ளது புனேவின் சிவானே பகுதியைச் சேர்ந்தவர் சமீர் ஜாதவ். தனியார் பள்ளி ஆசிரியையான அஞ்சலி என்பவரை திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீர் ஜாதவ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், தனது மனைவி அஞ்சலியை […]

இந்தியா உள்ள பங்குச் சந்தை மற்றும் மதிப்புப் பங்குகள் வாரியம் (Sebi), டிஜிட்டல் தங்கத்தில் (Digital Gold) முதலீடு செய்வதில் கவனமாக இருக்க முதலீட்டாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த டிஜிட்டல் தங்கம், பயனர்கள் சிறிய அளவு தங்கத்தை ஆன்லைனில் வாங்கும் வசதியை வழங்குகிறது. பல கோடி இந்தியர்கள் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர், இதை உண்மையான தங்கம் அல்லது Gold ETFs போல பாதுகாப்பானது என நினைத்து […]

ஜோதிடத்தில் கிரகங்களின் நிலை மற்றும் இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றும்போது, ​​அது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது. அந்த வகையில் நவம்பர் 11 ஆம் தேதி இதுபோன்ற ஒரு முக்கியமான வானியல் நிகழ்வு நடைபெறும். குரு பகவான் பின்னோக்கி வக்ர நிலையில் பெயர்ச்சி அடையும் அதே வேளையில், நீதிபதி சனி பகவான் ஒரு நேரடி இயக்கத்திற்கு வருவார். இந்த அரிய சேர்க்கை சில […]