தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையனின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் அரசியல் களத்தில் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இவர் டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோரை சந்தித்ததை தொடர்ந்து, இ.பி.எஸ். அவரை மொத்தமாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதன் பின்னணியில் செங்கோட்டையன் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பது […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
2025 – 2026 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால் 2022-2023 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) […]
இன்றைய வேகமான உலகில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டுக்கோப்பான உடலைப் பராமரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் பணிச்சூழல், போதிய உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை மற்றும் அதிக மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பதும், தொப்பை போடுவதும் சாதாரணமாகிவிட்டது. இதன் காரணமாக உடனடி தீர்வைக் கருதிப் பலர் சந்தைகளில் கிடைக்கும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதோடு, தேவையற்ற பக்க விளைவுகளையும் சந்திக்கின்றனர். எந்தவித […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நெல் பயிரிடப்படும் பரப்பு, விளைச்சலுக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, சாக்கு மற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள், லாரி போக்குவரத்து, சேமிப்புக் கிடங்குகள் போன்ற வசதிகளை செய்து கொடுத்து, உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டியது அரசின் […]
மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் (CDSCO) இணைந்து நாடு முழுவதும் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனை மையங்களில் நடத்திய அதிரடி சோதனையின் முடிவில், ஒட்டுமொத்தமாக 211 மருந்துகள் தரமற்றவை (Substandard) எனத் தெரியவந்துள்ளது. இந்த அறிவிப்பு, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சுகாதார துறையில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சோதனையில் கண்டறியப்பட்ட மருந்துகள் : கடந்த மாதம் (அக்டோபர் 2025) நாடு முழுவதும் அனைத்து வகையான மாத்திரை, […]
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.29 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகள், பட்டயப்படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கல்விக் கட்டணமாகவும், ரூ.10 ஆயிரம் சிறப்பு கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முதுநிலை பட்டயப்படிப்புகளுக்கு […]
மழையில் நனைந்து சேதமடைந்த 2 லட்சம் ஏக்கர் நெல் பயிர்களுக்கு இழப்பீடு எங்கே..? என் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட பயிர்களின் […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை – திருப்பத்தூர் – சிவகங்கை சாலையில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோயில். வைணவ பக்தர்கள் மத்தியில் இத்திருத்தலம் ‘தென் இந்தியாவின் பத்ரிநாத்’ என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. ஆழ்வார்களால் பாடப்பட்ட பாடல்களில் விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக இக்கோயில் புகழ்பெற்று விளங்குகிறது. தெய்வங்கள் ஒன்று கூடிய திருத்தலம் : இந்த கோயிலின் […]
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டினையொட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும். தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்பின் […]
அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், இன்று இலங்கை அருகேயும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலாக்கா ஜலசந்திப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நிகோபார் தீவுகளில் இருந்து தென்கிழக்கே 870 கி.மீ. தொலைவில் […]

