நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் வாடும் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி கிட்னியை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மற்றும் திருச்சியை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து, முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையிலான குழு விசாரணை […]

2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.. விருதை அறிவிக்க இன்னும் சில மணி நேரம் உள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் , பராக் ஒபாமா மீது கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டிற்காக எதுவும் செய்யாத போதிலும் ஒபாமா நோபல் பரிசை பெற்றதாக தெரிவித்துள்ளார்.. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது ட்ரம்ப் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ட்ரம்ப் “ 2009 முதல் 2017 […]

இந்திய பண்பாட்டிலும் தமிழர் மரபிலும் தங்கம் என்பது செல்வத்தின் சின்னமாகவும், பாதுகாப்பான முதலீடாகவும், குடும்பப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் நீங்காத இடம் பிடித்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவதால், சாதாரண மக்கள் தங்க நகைகளை வாங்குவது என்பது இயலாத ஒன்றாக மாறிவிட்டது. உதாரணமாக, 1970-ஆம் ஆண்டில் ஒரு கிராம் ரூ.3.32-க்கு விற்ற தங்கம், தற்போது ரூ.11,500-ஐ தொட்டுள்ளதால், எளிய மக்கள் தங்கத்தை […]

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்றிரவு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக தலிபான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.. ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்தடைந்த சிறிது நேரத்திலேயே காபூலில் பாகிஸ்தான் விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளது.. 4 ஆண்டுகளுக்கு முன்பு அஷ்ரப் கானி அரசாங்கம் கவிழ்ந்ததை தொடர்ந்து தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் காபூலில் இருந்து வரும் முதல் உயர்மட்டப் பயணம் இதுவாகும். குண்டுவெடிப்புக்கான […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். அண்மையில் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்திற்கும் மிரட்டல் வந்தது. […]

சமீபத்திய ஆண்டுகளில் உலகம் நிறைய வளர்ச்சியடைந்துள்ளது. தொழில்நுட்பம் புதிய பாதையை நோக்கிச் செல்கிறது. இருப்பினும், சில பழங்குடியினர் தங்கள் மூதாதையர் பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். பல பழங்குடியினர் இன்னும் கற்கால மனிதர்கள் வாழ்ந்த விதத்தையே வாழ்கிறார்கள். இந்த பழங்குடியினரின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நவீனமானவை அல்ல. பலர் தங்கள் பழக்கவழக்கங்களால் அதிர்ச்சியடைகிறார்கள். சில பழங்குடியினர் இன்னும் தங்கள் மரபுகளைப் பாதுகாத்து வருகின்றனர் என்பது உண்மை. நமீபியாவில் உள்ள ஹிம்பா […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த ரொக்கப் பரிசோடு சேர்த்து, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ஏலக்காய், முந்திரிப் பருப்பு, […]

நம் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சமீப காலங்களில், AI கருவிகளைப் பயன்படுத்தி, ஒருவரின் உண்மைப் புகைப்படங்களை சிதைத்து, ஆபாசமான அல்லது தவறான சித்தரிப்புகளாக மாற்றும் ‘டீப்ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தின் அத்துமீறல்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. இணையத்தில் எளிதாகக் கிடைக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனிநபரின் அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல், […]