வங்கிச் சேவை முதல் அரசுத் துறைச் சேவைகள் வரை அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ள ஆதார் அட்டையில், விவரங்களைப் புதுப்பிப்பதற்கான கட்டணங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு ஒருபுறம் இருந்தாலும், 7 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்குப் பயோமெட்ரிக் பதிவுகளை மேற்கொள்வதற்கான கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்து சலுகை அளித்துள்ளது. பயனர்கள் ஆதார் சேவை மையங்களில் தங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் பதிவுகளைப் […]

கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், செந்தில்வேல் என்பவரை காதலித்துத் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, மகேஸ்வரி இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால், குழந்தைகளையும் கணவனையும் புறக்கணித்து ஆடம்பரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், செந்தில்வேல் வழிப்பறி வழக்குகளில் சிக்கிச் சிறை சென்றதும், திருநங்கைகளுடன் நெருங்கிப் பழகியதும் தெரியவந்துள்ளது. செந்தில்வேலுக்கு ஜாமீன் பெற, மகேஸ்வரியின் […]

ஆரோக்கியமாக வாழ விரும்பும் நாம், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்துப் பரப்பப்படும் பல கட்டுக்கதைகளில் சிக்கிவிடுகிறோம். இந்தத் தவறான நம்பிக்கைகள், பல சமயங்களில் நமது ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கே ஆபத்தாக மாறிவிடுகின்றன. உடல் எடைக் குறைப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை, மக்களிடையே நிலவும் 5 முக்கிய கட்டுக்கதைகளையும் அதற்கான உண்மைகளையும் இங்கே பார்க்கலாம். கட்டுக்கதை 1 : கொழுப்புச் சத்துதான் உங்களை எடை அதிகரிக்க செய்கிறது. உண்மை : […]

தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) அடைந்து வரும் அசுர வளர்ச்சி உலக அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பப் புரட்சி மனித வாழ்க்கையை மாற்றியமைக்கும் என பலரும் சிலாகிக்கும் நிலையில், அமேசான் நிறுவனர் மற்றும் உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், AI முதலீடுகள் குறித்து முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற இத்தாலியன் டெக் வீக் 2025 மாநாட்டில் பேசிய […]

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் […]