தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரோபோ சங்கரின் திடீர் மறைவு, திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்குப் பின்னால், சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளும், விமர்சனங்களும் பரவின. ரோபோ சங்கரின் உடல்நலக் குறைவுக்கு குடிப்பழக்கமே முக்கிய காரணம் என்று பரப்பப்பட்ட கருத்துகளுக்கு அவரது நெருங்கிய நண்பரும், கலைஞருமான நாஞ்சில் விஜயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். “குடிப்பழக்கம் ஒரு காரணம் தான். ஆனால், அது மட்டுமே […]

ஹைதராபாத் நகரின் அல்வால் பகுதியில் பள்ளி மாணவிகளான 3 சிறுமிகள் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளும் 9-ஆம் வகுப்பு படித்து வருபவர்கள். இந்த சம்பவம் நிகழ்ந்த பின்னர், சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் உண்மையை தெரிவித்ததை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி, “தசரா விழாவை […]

பிறப்பும் இறப்பும், இந்த உலகில் பிறந்த எவரும் ஒரு நாள் இறந்துவிடுவார்கள் என்பதுதான் உண்மை, இதை யாராலும் மாற்ற முடியாது. ஒவ்வொரு மதத்திலும் பிறப்பும் இறப்பும் தொடர்பான பல பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் உள்ளன. ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறும்போது, ​​அவரது ஆன்மாவின் அமைதிக்காக பல சடங்குகள் செய்யப்படுகின்றன. இறந்த பிறகும், இறந்த நபர் சில விஷயங்களில் பற்றுக் கொண்டிருப்பார், எனவே இறந்தவரின் சில விஷயங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று […]

இன்றைய அவசர உலகில் சிலர் பின்பற்றும் பழக்கங்கள் மெதுவாக கொல்லும் விஷமாக மாறக்கூடியது. குறிப்பாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக்கக்கூடியது. அத்தகைய பழக்க வழக்கங்கள் பற்றியும், அவை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றியும் பார்போம். நம்முடைய மூளை எப்போதும் வேலை தொடர்பான திரைகளாலும், தினசரி வாழ்வின் அழுத்தங்களாலும் அதிகமாக தூண்டப்படுகிறது. அதனால்தான், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து சற்று விலகி அமைதியாக நேரத்தைச் செலவிடுவது அவசியமானதாக மாறிவிட்டது. எனவே, […]

குறைவான எடையுடன் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளின் இறப்பைத் தடுக்க பிசிஜி தடுப்பூசி அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 1000 குழந்தைகளுக்கு 24.9 என்ற அளவில் உள்ளது. இது வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள விகிதத்தைக் காட்டிலும் அதிகமானதாகும். பச்சிளங்குழந்தைகளின் இறப்பிற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக குறை மாதத்தில் பிறப்பது அதாவது 37 வாரங்கள் முடிவடைவதற்குள் பிறக்கும் குழந்தைகள், இரண்டாவதாக பாக்டீரியா கிருமிகள் மூலம் […]

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது வட மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த நிலையில், இன்று காலை தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று […]

தலைமுடிக்கு ‘டை’ பயன்படுத்தும் பலரும், அதில் உள்ள ஆபத்துகளை உணர்வதில்லை. சமீப காலமாக, ஹேர் டை-யால் ஏற்படும் அலர்ஜி, சருமத் தடிப்பு, முகம் கருத்தல் போன்ற பிரச்சனைகளுக்காக சிகிச்சை நாடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தோல் நோய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஹேர் டை-களில் உள்ள PPD (Para-Phenylene Diamine) மற்றும் அமோனியா போன்ற வேதிப் பொருட்கள் தான் இந்த ஒவ்வாமைகளுக்கு காரணமாகும். குறிப்பாக, PPD சூரிய ஒளியை அதிகமாக ஈர்த்து, […]