கரூரில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. பொதுமக்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. எனினும் விஜய் மீது எந்த தவறும் இல்லை இது திமுக செய்த சதி என்று தவெகவினர் கூறிவருகின்றனர்.. விஜய்க்கு ஆதரவாகவும், எதிராவும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து […]

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித்குமார், திரையுலகில் தனது தனி சிறப்பான இடத்தை வைத்திருந்தாலும், தனது நடிப்பைத் தாண்டி கார் பந்தயத்திலும் சாதனைகளை படைத்து வருகிறார். நடிப்புக்கு தற்காலிகமாக ஓய்வளித்து, தனது முழு கவனத்தையும் பந்தய உலகிற்குத் திருப்பியுள்ள அஜித், தற்போது சர்வதேச அரங்கில் தனது திறமையை நிரூபித்து ரசிகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். திரையுலகில் அவர் நுழைந்த காலம் முதலே, அஜித்குமாருக்கு ரேசிங் மீது அலாதியான ஆர்வம் உண்டு. […]

ரேவதிக்கு ரத்தம் கொடுக்க இருந்த மாரியை, சதி செய்த சிவனாண்டி கடத்தி அடைத்து வைத்தான். இந்த விஷயத்தை அறிந்த கார்த்தி, ரவுடிகளுடன் மோதி மாரியை மீட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அதன்பின் மாரி ரேவதிக்கு ரத்தம் கொடுத்தார். உடனே ஆபரேஷன் நடந்தது. சில மணி நேரங்களின் அச்சமும் குழப்பமும் கழிந்த பிறகு, மருத்துவர் வெளியே வந்து “ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆனாலும், ரேவதி இன்னும் அபாய நிலையில் தான் இருக்கிறார். […]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தி வரும் பிரச்சாரக் கூட்டத் தொடரின் 3ஆம் கட்டம் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடந்தது. ஆனால், கரூரில் கட்டுக்கடங்காத கூட்டத்தால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் பிரச்சாரத்துக்காக தொண்டர்களும் ரசிகர்களும், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும், அதிகாலை முதலே திரண்டு இரவு வரை காத்திருந்தனர். விஜய்யின் பிரச்சார வாகனம் […]

பிரபல நகைச்சுவை நடிகரும் தவெக தலைவர் விஜய்யின் தீவிர ஆதரவாளருமான தாடி பாலாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செய்தி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, ‘Realone Media’ என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தாடி பாலாஜியின் உடல்நிலை மற்றும் அவரது உதவும் குணம் குறித்து விரிவாக பேசியுள்ளார். தாடி பாலாஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர் ஒரு மாதமாக சிகிச்சையில் […]

தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரோபோ சங்கரின் திடீர் மறைவு, திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்குப் பின்னால், சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளும், விமர்சனங்களும் பரவின. ரோபோ சங்கரின் உடல்நலக் குறைவுக்கு குடிப்பழக்கமே முக்கிய காரணம் என்று பரப்பப்பட்ட கருத்துகளுக்கு அவரது நெருங்கிய நண்பரும், கலைஞருமான நாஞ்சில் விஜயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். “குடிப்பழக்கம் ஒரு காரணம் தான். ஆனால், அது மட்டுமே […]

இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதி இல்லாமல், சோனி நிறுவனம் பயன்படுத்தி வருகிறது என்றும், அந்த பாடல்களை மாற்றியமைப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.. மேலும் தனது பாடல்களை தனது அனுமதியின்றி யூ டியூப் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஒலிபரப்புவதன் மூலம் வருமானத்தையும் சோனி நிறுவனம் ஈட்டி வருவதாகவும் இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.. சோனி நிறுவனத்தின் […]