கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கோவிட்-19 காரணமாக 10 இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7,383 ஆகக் குறைந்துள்ளது. ஒரு நாள் முன்பு இந்த எண்ணிக்கை 7,400 ஆக இருந்தது. இந்த காலகட்டத்தில், 17 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கோவிட் நோயால் இறந்த 10 பேரில் 3 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள், […]

நாட்டில் தற்போது கொரோனா பெருந்தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், கர்ப்பிணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே, கேரள மாநிலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி, 24 மணி நேரத்திற்குள் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கேரளாவில் கொரோனா பாதித்து […]

2019-ல் சீனாவில் இருந்து தொடங்கி, உலகையே அதிரவைத்த கொரோனா வைரஸ், மீண்டும் தலைதூக்கும் நிலை உருவாகி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்றுப் பாதிப்பு மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறையும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் பரவியுள்ள JN.1 எனப்படும் கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் இந்தியாவிலும் மெல்ல பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் […]

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று, பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை கொடுத்தது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்திய பிறகும், முழு ஊரடங்கு பிறக்கப்பட்டது. இதனால், கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு வரை கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. இந்நிலையில், நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. நாடு முழுவதும் 5,364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு […]

தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமென்றும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு […]

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்துள்ளது. 2025 ஜனவரி முதல் கொரோனா பாதித்த 28 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி […]

தமிழ்நாட்டில் கொரானா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டு உலகையே உலுக்கி எடுத்தது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர். ஆனால், தற்போது மீண்டும் […]

சேலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 25 வயது இளைஞர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, முழு ஊரடங்கு, தடுப்பூசி போன்றவற்றால், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் […]

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து முதன்முதலாக பரவிய கொரோனா தொற்று உலகையே புரட்டிப் போட்டது. இந்த கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, முழு ஊரடங்கு, தடுப்பூசி ஆகியவற்றால் கொரோனா கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் வேகமாக பரவி வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவை […]

சென்னை மறைமலைநகரில் கொரோனா தொற்று பாதிப்பால் 60 வயது முதியவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்தியாவில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறையின் […]