கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]

திமுகவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திமுக இளைஞர் அணி ;திமுக 75 அறிவுத்திருவிழா’ என்று நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளது.. இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் அறிவுத்திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்திட வேண்டும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ கழகத்தை தொடங்கியவர் அறிஞர் அண்ணா, 50 ஆண்டு காலம் கழகத்தை கட்டிக்காத்தவர் கலைஞர்.. […]

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெண் ஒருவர் காட்டுப் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த பாண்டிக்குமார் என்பவரின் மனைவி மகேஸ்வரி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மகேஸ்வரிக்கு நிலம் வாங்கி விற்பதில் அதிக ஆர்வம் இருந்ததால், அவர் தெரிந்தவர்களுடன் அதிக அளவில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்துள்ளார். இந்த சூழலில், கடந்த நவம்பர் 6ஆம் […]

பெண்களின் பாதுகாப்பையும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு “பிங்க் ஆட்டோ திட்டத்தை” சென்னை நகரில் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் தாங்களே ஆட்டோ ஓட்டி வருமானம் ஈட்டலாம். அரசு, ஆட்டோ வாங்குவதற்காக 40% வரை மானியம் வழங்குகிறது. மேலும், பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் மற்றும் இலவச ஓட்டுநர் பயிற்சி […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல் கிடைத்ததும், தனது சகோதரரை சந்திப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவுக்கு உடனடியாக புறப்பட்டுச் சென்றிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில், குறிப்பாக அவர் சினிமா துறையில் நுழைந்த ஆரம்ப காலத்தில், அவரை வழிநடத்திய முக்கிய நபர்களில் சத்யநாராயணாவும் ஒருவர். தற்போது பெங்களூருவில் உள்ள ஒரு […]

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற அரசின் அனைத்து நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இதனால் ரேஷன் கார்டில் திருத்தம் கோரி விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை சமீபகாலமாக கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், அரசு ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் தமிழக அரசு புதிய முக்கியக் கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. […]

பதிவுத்துறையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலான இட ஒதுக்கீடு அடிப்படையில் உதவி பதிவுத்துறை தலைவர் பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் வழங்கப்படவில்லை என்பது தொடர்பான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. பதிவுத்துறையில் காலியாக உள்ள உதவி பதிவுத்துறை தலைவர் பணியிடங்களை நிரப்பவும், பதிவுப் பணி தொய்வில்லாமல் நடைபெறவும், மக்களுக்கு பதிவு சார்ந்த சேவைகளை வழங்குவதை துரிதப்படுத்தவும் பதிவுத்துறையின் நிர்வாக நலன்களை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள […]

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான மின்சாரத் தேவையை உறுதி செய்யும் வகையில், நாட்டின் ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய மின்சக்தியை அளிக்கும் பிரம்மாண்டமான திட்டமான ‘பிரதம மந்திரி சூரிய சக்தி – இலவச மின்சார திட்டம்’ (PM Surya Ghar: Muft Bijli Yojana) மத்திய அரசால் ரூ. 75,000 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்தக் கூரை சூரிய மின்சக்தி திட்டம் மூலம், வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை […]

மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் ஆசிரியர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியைகள் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தங்கள் பெற்றோருடன் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தனர். […]