Is TVK going to contest the 2026 elections with this symbol? Vijay who ticked it! Volunteers are happy..
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் பாரில் பெண் ஒருவரை அறைக்கு அழைத்த விவகாரத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரத்தில் ரிசார்ட் வைத்திருக்கும் வின்ஸ்டன் பிரபு (37) மற்றும் அவரது தம்பி திவாகர் அரவிந்த் (35) உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர், ஹோட்டலில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அதே பாரில் கொளத்தூரைச் சேர்ந்த அரவிந்தன் […]
பீடி மற்றும் திரைப்பட துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு 31-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 1-ம் வகுப்பு முதல் கல்லூரி, ஐடிஐ / டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவைச் சேர்ந்த அல்லியந்தல் பகுதியைச் சேர்ந்தவர் லூக்காஸ் (வயது 45), ஒரு தொழிலாளி. கடந்த சில மாதங்களாக மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று தனது வீட்டிலிருந்தபோது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் 15 தையல்கள் போடப்பட்டன. இருப்பினும், திடீரென மருத்துவமனையில் இருந்து […]
பிரதமரின் கிசான் திட்டத்தில் மேலும் அதிக தமிழக விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வேலூரில் உள்ள வேளாண் அறிவியல் மையத்திற்கு மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் நேற்று வருகை தந்தார். பிரதமரின் தனம் தானியம் வேளாண் திட்டம், தேசிய பருப்பு வகைகள் இயக்கம், இயற்கை வேளாண்மை இயக்கம், பருப்பு வகைகள் மீதான […]
பிரபல நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் 9 நிகழ்ச்சியின் நடுவராக அறிமுகமானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், நிகழ்ச்சியின் தற்போதைய மந்தமான மற்றும் சர்ச்சைக்குரிய போக்கு, தொகுப்பாளரான அவருக்கே சலிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், விஜய் சேதுபதி தனது அதிருப்தியை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். “வீட்டில் போட்டியாளர்கள் நடந்து கொள்ளுறது ரசிக்கும் படியாக இருக்கணும்… இல்ல சகிச்சுக் கொள்ளுற மாதிரியாவது இருக்கணும். ஆனா, […]
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வழங்க வாய்ப்புள்ளது. தமிழ் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறையில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். அந்த வகையில், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே, கந்த சஷ்டி என்றழைக்கப்படும். கந்த சஷ்டிக்கு முன் 7 நாள்கள் பக்தர்கள் […]
சுபமுகூர்த்த நாளான 27ம் தேதி மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் பத்திரங்கள் பதிவாக வாய்ப்புள்ளதால் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாளான 27.10.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் […]
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே 28-ம் தேதி கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே 930 கி.மீ. தூரத்திலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 890 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது, மேற்கு, வட […]
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.. இதனால் அணைகள், ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் ஆங்காங்கே திறந்துவிடப்பட்டு வருகிறது.. அதன்படி சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 22-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.. ஆனால் தனக்கு தகவல் தெரிவிக்காமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி […]

