வங்கக்கடலில் இன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்.27-ம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, அதற்கு அடுத்த 24 மணி […]

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்தியநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில் “ சென்னை தி நகர் தொகுதியில் மொத்தமாக வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு, திமுகவுக்கு ஆதரவாக சேர்க்கப்பட்டுள்ளது.. திமுகவுக்கு ஆதரவாக சுமார் 13,000 அதிமுக ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.. […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 27-ம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வழங்க வாய்ப்புள்ளது. தமிழ் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறையில் இரண்டு சஷ்டி திதிகள் வரும். அந்த வகையில், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே, கந்த சஷ்டி என்றழைக்கப்படும். கந்த சஷ்டிக்கு முன் 7 […]

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் பாலியல் புரோக்கர்களை கைது செய்ய காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டதை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில் நடத்தி வந்த ஒரு புரோக்கரை நெற்குன்றம் பகுதியில் காவல்துறையினர் கைது செய்தனர். நெற்குன்றம் கோல்டலன் ஜார்ஜ் நகர் பகுதியில் […]