சென்னையில் இன்று காலை முதலே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாகவே இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பாக அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம், மேதா நகர் உள்ளிட்ட 5 இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
கோவை மாவட்டம் சூலூர் அருகே கணியூரைச் சேர்ந்த 40 வயது கார்த்திக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, 9 மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், கார்த்திக்கின் மனைவி தனது 32 வயது தங்கைக்கு சில நாட்களுக்கு முன்பு நீலாம்பூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தார். ஆனால், திருமணம் முடிந்து நான்கே நாட்களில் புதுப்பெண் திடீரென […]
அதிமுக தலைமைக்கு எதிராக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கடந்த செப்டம்பர் மாதம் அவர் தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்… ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தீபாவளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற தொடர் பண்டிகை விடுமுறைகளுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் வழக்கமான செயல்பாடுகளுக்கு திரும்பியுள்ளன. மாணவர்கள் விரைவில் தங்களது இரண்டாம் இடைப்பருவத் தேர்வுகளை எதிர்கொள்ள இருக்கின்றனர். இத்தேர்வுகள் நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகளும் நடைபெற உள்ளன. இந்த சூழலில், வழக்கமாக பண்டிகை விடுமுறைகள் நிறைந்திருக்கும் மற்ற மாதங்களை காட்டிலும், நவம்பர் மாதத்தில் […]
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: கிராம ஊராட்சி செயலாளர் மொத்த காலியிடங்கள்: 1,483 கல்வித் தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை […]
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சித்தூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான புவனேஸ்வரி, நத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்து வந்த இவருக்கும், அதே வடமதுரையைச் சேர்ந்த 23 வயதான நந்தகுமார் என்பவருக்கும் இடையே இரண்டு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மலர்ந்தது. நந்தகுமார் வடமதுரையில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். மருத்துவமனையில் பயிற்சி […]
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் நன்கொடை வசூலிக்க ஆசிரியர்கள், அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் தறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்டம், நிறுவனங்கள் சட்டம் பிரிவு 8-ன்கீழ் தமிழக அரசால் பதிவு செய்யப்பட்டதாகும். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட பங்களிக்க விரும்பும் […]
தமிழ்நாடு அரசு, பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதில், ஏழைப் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம், தற்போது வரை சுமார் 1.14 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு […]
கோவையில் 20 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் பிரியங்க் கனூங்கோ, தமிழக அரசைக் குற்றம் சாட்டி, “பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கங்களுக்கு இன்னும் எத்தனை நிர்பயாக்கள் தேவைப்படும்?” என்று கேள்வி எழுப்பினார். கோயம்புத்தூரில் 20 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் முழு நாட்டையும் […]

