ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தார்.. அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் “ எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்.. எடப்பாடியார் உறுதியாக வெற்றி பெறுவார்.. அவர் தான் 2026-ல் முதலமைச்சர். மின்மினி பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது. மக்கள் தான் எஜமானர்கள்.. இது சினிமா வசனம் இல்லை.. அமிதாப் பச்சன் வந்தாலும் கூட்டம் […]

தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.. அதன்பின்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. 202,2023, 2024 ஆகிய ஆண்டுகளில் திமுக அரசும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கியது.. ஆனால் 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஜனவரி 2) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டும் நாளை குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், புத்தாண்டின் முதல் முக்கிய நிகழ்வாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜனவரி 6-ஆம் தேதி கூடுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆண்டிற்கான மிக முக்கியமான அதிரடி முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் மிக முக்கியமான […]

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இந்த முறை பொங்கல் பரிசில் ரொக்கப் பணம் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே விண்ணை முட்டியிருந்தது. ஆனால், தற்போதைய அறிவிப்பில் ரொக்கப் பணம் இடம்பெறாதது பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக ரூ. […]

2026-ஆம் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் தங்கம் சுமார் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, வரலாற்றில் இல்லாத வகையில் லாபத்தை அள்ளிக் கொடுத்தது. இந்த அதிரடி உயர்வு நடப்பு ஆண்டிலும் தொடருமா என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் தளத்தில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடுகையில், சர்வதேச சந்தையில் தங்கம் […]

தமிழ்நாட்டில் வாடகைக்கு குடியிருப்போர் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் என இரு தரப்பினருக்கும் இடையிலான உறவை முறைப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வாடகை சட்ட மாற்றங்கள் இன்று (2026 ஜனவரி 1) முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகின்றன. வாடகை ஒப்பந்தங்கள் முதல் முன்பணம் (Deposit) வரை பல முக்கிய அம்சங்களில் நிலவி வந்த குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பதிவு […]

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது உட்கட்சி கட்டமைப்பில் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு, கட்சி வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில், விசிக-வில் செயல்பட்டு வரும் 144 மாவட்ட செயலாளர்களில் 48 பேரை அதிரடியாக பதவியில் இருந்து நீக்கி திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். மேலும், […]

புத்தாண்டு தினமான இன்று, இல்லத்தரசிகளுக்கு நிம்மதி தரும் செய்தியும், வணிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியும் ஒருசேர வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் ஆகியவை ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், 2026-ஆம் […]