தமிழகத்தில் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தி, அவர்களை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு அதிரடித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்துப் பயணம் மற்றும் தோழி விடுதிகள் போன்ற திட்டங்கள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது விளிம்புநிலை பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மற்றுமொரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, வறுமைக் கோட்டிற்கு […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் பொங்கல் பரிசு போன்ற அரசின் முக்கிய நலத்திட்டங்களைப் பெறுவதற்கு குடும்ப அட்டை (Ration Card) அடிப்படை ஆவணமாக இருப்பதால், புதிய அட்டை கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. மக்களின் இந்தத் தேவையைக் கருத்தில்கொண்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளித்து விரைவாகப் புதிய குடும்ப அட்டைகளை வழங்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து தகவல் […]
தமிழ்நாட்டின் பாரம்பரிய அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநில அரசு அறிவித்த ரூ.3,000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 8-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடியே 22 லட்சத்திற்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். […]
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா ஆண்டுவிழா நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றுள்ளார்.. இந்த விழாவில் திமுக எம்.பி. ஆ.ராசா, கூடலூர் அதிமுக எம்.எல்.ஏ பொன்.ஜெயல்சீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி “ அறிவார்ந்த குடிமக்களை உருவாக்குவதில் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.. எனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் நான் பல மாணவிகளிடம் என்னவாக போகிறீர்கள் என்று கேட்டுள்ளேன்.. டாக்டர், […]
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடிக்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.. ரொக்கப் பணம் மட்டுமன்றி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அட்டைகளை முறைப்படுத்துவதில் உணவுப் பொருள் வழங்கல் துறை தற்போது அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், நீண்ட நாட்களாகப் பயன்பாட்டில் இல்லாத மற்றும் போலி முகவரிகளில் இயங்கும் குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து அவற்றை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தொடர்ந்து 3 மாதங்களாக எவ்விதப் பொருட்களையும் […]
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் வேளையில், அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்கள் மீண்டும் புதிய திருப்பத்தை எட்டியுள்ளன. குறிப்பாக, பிரிந்து கிடக்கும் நிர்வாகிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னெடுத்து வரும் சமரச முயற்சிகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. தென் மாவட்ட வாக்கு வங்கியை தக்கவைக்கவும், அதிமுக-வை பலமான சக்தியாக உருவெடுக்க வைக்கவும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி என்ற தாரக […]
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் கறையாக படிந்துள்ள கரூர் வேலுசாமிபுரம் சம்பவம் தொடர்பான விசாரணை, இப்போது டெல்லி சிபிஐ (CBI) தலைமையகத்தில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் […]
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், தற்போது அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. கடந்த டிசம்பர் 12, 2025 அன்று சென்னையில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இதன் மூலம் கூடுதலாக 1,69,4339 பெண்கள் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 1,30,69,831 பயனாளிகள் மாதம் 1,000 […]

