கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
நேற்று தமிழர் திருநாளான தை பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.. இதை தொடர்ந்து இன்று விவசாயிகளுக்கு உழுவதற்கு உதவி செய்து மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மேலும் மனிதன் அறநெறியுடன் எப்படி வாழ வேண்டும் என்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் இரண்டே வரி குறளில் சொல்லி நல்வழிப்படுத்திய திருவள்ளூவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொங்கலுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.. அந்த வகையில் இன்று […]
2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது உள்ளிட்ட விருதுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது.. இந்த நிலையில் இன்று 2026-ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. தந்தை பெரியார் விருதை […]
தமிழக கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்ப கனவுகளுக்கு சிறகுகளை விரிக்கும் வகையில், ‘உலகம் உங்கள் கையில்’ எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5-ஆம் தேதி தொடங்கி வைத்தார். சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு உயர்தர மடிக்கணினிகளை வழங்கும் இத்திட்டம், டிஜிட்டல் யுகத்தில் தமிழக இளைஞர்களை உலகளாவிய போட்டிக்குத் தயார் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இதற்காக 2025-26 நிதிநிலை அறிக்கையில் ரூ.2,000 கோடியைத் தமிழக அரசு பிரத்யேகமாக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. […]
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தொடர்பாக, பயனாளிகளின் தகுதிகள் குறித்த கூடுதல் விளக்கங்கள் மற்றும் சில புதிய கட்டுப்பாடுகளை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மாதம் ரூ.1,000 வழங்கும் இத்திட்டம், உண்மையான ஏழை எளிய பெண்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இந்த சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் நிரந்தரப் பணியில் இருந்து ஊதியம் பெறுபவர்களுக்கு இனி இந்த உரிமைத் தொகை வழங்கப்படாது […]
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், யாருடன் கைகோர்க்கப் போகிறது என்பதே தற்போதைய அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக். இந்நிலையில், சிறுபான்மையினரின் வாக்குகளைக் கணிசமாக தன்வசம் வைத்துள்ள எஸ்டிபிஐ (SDPI) கட்சி, விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், “தேர்தல் கூட்டணி குறித்த இறுதி […]
தமிழக அரசியல் சதுரங்க வேட்டையில், எதிர்வரும் தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய மூவரும் ஒரே நேர்க்கோட்டில் சிந்திப்பது அரசியல் நோக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் கட்சியின் அரசியல் வலிமையை நிலைநிறுத்தவும், கௌரவமான தொகுதிகளைப் பெறவும் இவர்கள் கடைபிடிக்கும் நிதானமான போக்கு, பெரிய கட்சிகளுக்கு ஒரு […]
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள வேளையில், அதிமுக-வின் கோட்டையாக கருதப்படும் டெல்டா மாவட்டங்களில் அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. வழக்கமாக அதிமுக-வுக்கு வலுசேர்க்கும் கொங்கு மண்டலத்தில் ஏற்படக்கூடிய சிறு சரிவுகளை, டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யும் வாக்குகளை கொண்டு ஈடுகட்டலாம் என்பதே எடப்பாடியின் கணக்காக இருந்தது. ஆனால், தற்போது அந்த மண்டலத்திலேயே மூத்த நிர்வாகிகளுக்கு இடையே வெடித்துள்ள அதிகாரப் போட்டி, […]
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய வழக்கு ஒன்றில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படும் இந்தப் புகாரில், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் சூழலில், சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ தான் […]
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திமுக அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், தற்போது அரசியல் களத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வரும் இத்திட்டம், சமீபத்திய இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்குப் பிறகு சுமார் 1 கோடியே 30 லட்சம் பயனாளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, பெண்களின் வாக்குகளை […]

