தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகள் போன்ற பல தனியார் நிறுவனங்களில், அசாம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், அரசர்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வேலைக்குச் சேர்ந்தனர். […]

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் தீவிரமாக உள்கட்சி கட்டமைப்பை பலப்படுத்தி வருவதுடன், வரவிருக்கும் தேர்தலுக்கான பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில், அக்கட்சியின் தேர்தல் சின்னம் குறித்த எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது. த.வெ.க.வின் சின்னமாக ‘விசில்’, ‘பேட்’, ‘வெற்றிக் கோப்பை’ அல்லது ‘மோதிரம்’ போன்ற பல சின்னங்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், த.வெ.க.வின் தேர்தல் சின்னம் பற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]

தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், மாநில அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நிதிப் பற்றாக்குறை காரணமாக ரொக்கப் பணம் தவிர்க்கப்பட்டு, பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலைக் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மூங்கில்பாளையத்தில், நாளை மறுதினம் (டிசம்பர் 18) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள காவல்துறை, சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மொத்தம் 84 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. காவல்துறை விதித்துள்ள 84 நிபந்தனைகளில் முக்கியமாக, பொதுக்கூட்ட மேடை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் […]

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 17-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு […]

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார்.. இந்த மாநாடு முடிந்து வீடு திரும்பிய சீமானின் காரை திமுக நிர்வாகி ரங்கன் வழிமறித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.. இதனால் கோபமடைந்த சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் திமுக நிர்வாகி ரங்கனை சரமாரியாக தாக்கினர்.. தொடர்ந்து ரங்கனை கைது செய்ய வேண்டும் என்று சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த […]